Header Ads



அலிசப்ரி ரஹீமின் வீடு, காரியாலயம், வாகனங்களின் தற்போதைய நிலைமை


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் நேற்றிரவு (09-05-2022) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் வான் வீதியில் உள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இ பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லம்இ அவரது அலுவலகம் என்பனவற்றின் மீது இனந்தெரியாத குழுக்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன்இ மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்கிழமை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் கதியே இது. அவரின் சொத்துக்கள் எரிக்கப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் வாதப் பிரதிவாதங்கள் தொடர்வது இங்கு கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.