Header Ads



புதிய பிரதமர் யார்..? பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை


நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்ற  உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கலந்துரையாட பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் தற்போதைய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று நாளை 11  ஆம் திகதி புதன்கிழமை கூட்டப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்பிதழ் சகல கட்சித் தலைவர்களுக்கும் சபநாயகர் அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.