Header Ads



830 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய மருந்துகளை, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய பங்களாதேஷ்


56 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய மருந்து பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் முன்வந்துள்ளது.

2.3 மில்லியன் அமெரிக்க டொலர் ( 830 மில்லியன் ரூபாய்) பெறுமதியுடைய அத்தியாவசிய மருந்துகளே இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதனை உத்தியோகபூர்வமாக வழங்கும் விழா இன்று டாக்காவில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.