Header Ads



69 இலட்ச வாக்குகளால் ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுனவுக்கு மேதினத்தைக்கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலை - பரிகாசம் செய்யும் கிரியெல்ல


69 இலட்ச வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மே தினக் கூட்டத்தைக்கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறட லக்ஷமன் கிரியெல்ல எம்.பி தெரிவித்தார்.

தமக்கு தற்போதுள்ள மக்கள் ஆணையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சுபீட்சமான நாட்டை உருவாக்கப்போவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த மொட்டுக் கட்சி நாட்டை நாசம் செய்துள்ளது. தற்போது அரசாங்கத்தின் தலைவர்களுக்கு வெளியில் செல்ல முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. பங்கர்களில் அரசாங்கத்தின் தலைவர்கள் பதுங்கியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.