Header Ads



அரசியல்வாதிகள் எவரையும் என்னைச் சந்திக்க அனுமதிக்கப் போவதில்லை - மல்வத்து பீடாதிபதி அதிரடி அறிவிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை அரசியல்வாதிகள் எவரையும், தன்னைச் சந்திக்க அனுமதிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் அறிவித்துள்ளார்.

இந்நாட்டு மக்களின் துயரங்களுக்குத் தேவையான தீர்வுகளை வழங்காமல் காலம் தாழ்த்துவதைத் தவிர வேறு எதையும் அரசியல்வாதிகள் செய்யாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.