Header Ads



'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்­பான செய­லணி, தனது அறிக்­கையை 28 ஆம் திகதி கைய­ளிக்­கிறது


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­மையில் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்­பான ஜனா­தி­பதி செய­லணி தனது அறிக்­கையை எதிர்­வரும் 28 ஆம் திகதி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளிக்­க­வுள்­ள­தாக செய­ல­ணியின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வரும் செய­ல­ணியின் ஊடக இணைப்­பா­ள­ரு­மான எரந்த நவ­ரத்ன தெரி­வித்தார்.


சிபா­ரி­சுகள் அடங்­கிய “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­ல­ணியின் அறிக்கை தயார் நிலையில் இருப்­ப­தா­கவும் அவர் கூறினார். செய­ல­ணியின் பத­விக்­காலம் இம்மாதம் முற்றுப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

No comments

Powered by Blogger.