Header Ads



பெருநாள் அன்று காலிமுகத்திடலில் 100 சஹன் புறியாணி வழங்கி, மருதாணியும் போடத் தீர்மானம்


Ashroff Shihabdeen


பெருநாள் தினமன்று காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத் திடலுக்கு 100 சஹன் புறியாணி வழங்க ஒரு வர்த்தகர் முன் வந்திருப்பதாகவும், பெண்கள் அணியொன்று அங்குள்ள பெண்களுக்கு மருதாணி இடத் தீர்மானித்துள்ளதாகவும் ஒரு தகவல் வந்தது.

நோன்புப் பெருநாள் மகிழ்ச்சியை உணவு பகிர்ந்து ஏனைய இனத்தாருடன் சகோதர வாஞ்சையுடன் பகிர்ந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆர்ப்பாட்டக் களத்தைத் தொடர்ந்து நுணுகி நோக்கினால் டபள் கேமிஸ்டுகள், கொஞ்சம் தனித்துத் தெரிவதற்கான முயற்சிகள் மேற் கொளவோர், ஆர்ப்பாட்ட நோக்கத்தைச் சிதறடிக்க ஏற்பாடு செய்யப்பட்டவர்கள எனப் பலதிறப்பட்டவர்கள் திடீர் அவதாரம் எடுப்பதை அவதானிக்க முடியும்.

ஆனால் இந்த மருதாணி விடயம்தான் உதைக்கிறது. மருதாணி இட்டால் இடப்பட்ட கையை அசைக்க முடியாது. மருதாணி இடல் என்பது ஒரு கலை என்று ஏனைய இனத்தவர்கள் புரிந்து கொண்டாலும் அவர்கள் பயனபடுத்துவதாகத் தெரியவில்லை.


No comments

Powered by Blogger.