Header Ads



கோட்டா தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல் - பிளவுபட்ட 2 தரப்புகளும் பங்கேற்பு


இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (2) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஜனாதிபதி தலைமையிலான இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த யோசனை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.