உஸ்தாத் மன்சூரின் மாணவரான, அலி சப்ரியின் நடவடிக்கைகளை ஏற்கமுடியாது - பாரம்பரிய முஸ்லிம்கள் கோரியதற்காக ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டியதாக ஞானசாரர் தெரிவிப்பு
(நா.தனுஜா)
இஸ்லாமிய மதத்தின் பெயரால் கடந்த காலத்தில் நாட்டில் மேலோங்கிய வஹாபிஸ, அடிப்படைவாத செயற்பாடுகள் இன்னமும் முழுமையாக முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை. எந்தவொரு தரப்பினராலும் வெளிப்படையாக இனங்கண்டுகொள்ளமுடியாத பல்வேறு கோணங்களில் அவை இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், காதி நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அதன்மூலம் வழங்கப்படும் தீர்ப்புக்கள் போன்றவை அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்படுவதற்கான அழுத்தத்தை வீடுகளுக்குள்ளேயே தோற்றுவிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி ஒஸ்தாத் மன்சூரின் மாணவரான, தற்போதைய நீதியமைச்சர் அலி சப்ரியினால் முன்னெடுக்கப்படும் பல நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பாதுகாப்பு அமைச்சின் மிகவும் முக்கிய பதவியொன்றுக்கு சிங்கப்பூர் பிரஜையான ரொஹான் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெட்கமடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
நாடளாவிய ரீதியிலுள்ள பாரம்பரிய முஸ்லிம்கள் பலரின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றோம். இலங்கையில் வியாபித்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தோம். தற்போதும் பலராலும் கண்டறிய முடியாதவகையில் இஸ்லாமிய மதத்தின் பெயரால் அடிப்படைவாதத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தின் கீழ், சில அரசியல் தலைமைகளின் துணையுடன் நாட்டின் முன்னெடுக்கப்பட்டுவந்த தீவிரவாத மற்றும் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய நாம், இவற்றை முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் புதிய தலைமைத்துவமொன்று அவசியம் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம்.
அதற்கமைவாக கடந்த 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலின்போது பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகள் மூலம் தெரிவான ஜனாதிபதி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு ஏற்றவகையிலான சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார் என்று எம்மைப்போன்றே மேலும் பலர் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். புதிய தலைமைத்துவத்தின் கீழ் இத்தகைய சில செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் கூட, வேறுபல வழிகளிலும் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் 'ஜிஹாத்' கொள்கையானது பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தியதாக இருக்கும் அதேவேளை, அது உலகளாவிய ஜிஹாத் கொள்கையாக மாற்றமடையக்கூடிய போக்குகளும் காணப்படுகின்றன. அதேபோன்று அண்மையில் முஸ்லிம் விவாக, விகாரத்துச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்த யோசனையானது கடந்த ஆட்சிக்காலத்தில் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது.
அதுமாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலரும் அச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். குறிப்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் திருமண வயதெல்லை உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் மாற்றப்பட வேண்டும் என்று நாமும் குறிப்பிட்டோம். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயதில் பெண்கள் திருமணம் செய்வதென்பது பொதுச்சட்டத்தைப் பொறுத்தவரை குழந்தைத் திருமணமாகும். அது சிறுவர் துஷ்பிரயோகமாகவே கருதப்படும். ஆகவே நாட்டில் இவ்வாறான இரு சட்டங்கள் பேணப்படுவதை விடவும், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் உள்ள விடயங்களைப் பொதுச்சட்டத்திற்கு அமைவாகத் திருத்தியமைக்கப்பட வேண்டும். எனினும் அதனைத் திருத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்திற்கு உலமா சபை எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றது. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், காதி நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அதன்மூலம் வழங்கப்படும் தீர்ப்புக்கள் போன்றவை அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்படுவதற்கான அழுத்தத்தை வீடுகளுக்குள்ளேயே ஏற்படுத்துகின்றன.
அடுத்ததாக சில மாதங்களுக்கு முன்னர் நிகாப் மற்றும் புர்காவைத் தடைசெய்வதற்கான யோசனை அமைச்சர் சரத் வீரசேகரவினால் கொண்டுவரப்பட்டது. அந்த யோசனைக்குத் தற்போது என்ன நடந்தது? முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் பேசுபொருளானதன் பின்னர் அவ்விடயம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது என்றார் .
(வீரகேசரி)
சமுதாயத்தின் விரோதிகள் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் தாம் சம்பிரதாய முஸ்லீம்கள் எனக் கூறிக்கொண்டு சமூகத்தை கூறுபோட்டு தமது அற்ப சுயலாபத்துக்காக வேண்டி முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கும் இந்த முனாஃபிக்குகளுக்கு அழிவு அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக வரும்
ReplyDeleteபாரம் பரிய முஸ்லிம் என்ற வார்த்தையை பாவித்து மொத்த முஸ்லிம்களையும் சாடுகிறான். ஏனென்றால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளில் பாரம்பரிய முஸ்லிம்களது விடயத்திலும் நடந்துள்ளது.
ReplyDeleteஅநுராதபுர ஸியாரம் தொட்டும் ஜெய்லானிவரை நடந்துள்ள சம்பவங்கள் எமக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இவைகள் விடயத்தில் பாரம்பரிய முஸ்லிம்கள் என்று சொல்லக்கூடிய சூபித்துவ வாதிகளால் ஒன்றும் புடுங்க முடியவில்லை.
ஜனாஸா எரிப்பு விடயம், முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் உற்பட்ட அனைத்து விடயங்களிலும் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.
இவைகளை உணராமல் இன்னும் இன்னும் காட்டிக் கொடுக்கும் விடயங்களில் ஈடுபடுவது என்பது எவ்வளவு பெரிய மடத்தனமான வேலை. இவ்விடயங்களில் ஈடுபடக்கூடிய அந்த முனாபிக்களுக்கு அல்லாஹ்வின் சாபம் மிக விரைவில் வந்தடையட்டும். பாரம்பரிய முஸ்லிம்கள் என்றும் சொல்லும் சூபித்துவ வாதிகள் இதில் சம்பந்தம் இல்லையென்றால் அவர்கள் முன்வந்து அறிக்கை விட்டு தம்மைத்தாம் சுத்தப்படுத்திக் கொள்ளட்டும்.
ஆடு நனையுது என்று ஓநாய் அழுகிறது
ReplyDeleteArshad and Fawaz,
ReplyDeleteWhat made you both to believe on his words?