வேட்பாளர்களில் 80 வீதமானோர் மதுபான நிலையங்களை வைத்துள்ளனர்
இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 80 வீதமானவர்கள் மதுபான விற்பனை நிலையங்களுக்காக அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எந்த வேட்பாளராவது தன்னிடம் மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரம் இல்லை எனக் கூறுவாராக இருந்தால் அதனை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் எனவும் தேரர் கூறியுள்ளார்.
வேட்பாளர்கள் இந்த மதுபான நிலையங்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆதரவாளர்களுக்கு மதுபானங்களை வழங்க பயன்படுத்துவார்கள் எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Post a Comment