Header Ads



24 மணி நேரத்தில் 1710 பேர் கைது

இன்று (25) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1710 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரத்து 169 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.