பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்...!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுலாக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்ட நடைமுறையில் தளர்வு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹிரு தொலைக்காட்சியில் இன்று -25- ஒளிபரப்பான பத்திரிகை கண்ணோட்ட நிகழ்ச்சியில், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ் பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் முதலான சுய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment