2020 இல் நாங்களே, அரசாங்கத்தை உருவாக்குவோம் - அடித்துச்சொல்லும் மைத்திரி
“2020 ஆண்டு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்குவோம்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாடு கொழும்பு சுகததாச உள்ளரக அரங்கில் இன்று (03) இடம்பெற்றது.
இதன்போது, அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.
அத்துடன், 2020 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தங்களது பலத்தை காட்டத் தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடைபெறாமல் இருப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பிரதான காரணம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
ஓசில ஆட்சி கெடச்சதால மாமா இதுவும் சொல்லும் இதுக்கு மேலயும் சொல்லும்............இப்ப அதுக்கு எந்த பிறேக்கும் இல்லத்தானே.....பெரன்டு கெடக்கும்போதுதான் மாமாவுக்கு சுயநினைவு வரும்............
ReplyDeleteOver55years every one will go to home.srilankans should ignore kind of all politicians.
ReplyDelete