பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில், நடந்த 50 ரூபா விவாதம்
தோட்டத்தொழிலாளர் கொடுப்பனவு விவகாரம் குறித்து சபையில் அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நிமல் லான்ஸா ஆகியோருக்கும் இடையில் நேற்று சபையில் தமிழில் வாக்குவாதம் இடம்பெற்றது.
தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ரூபாவைக்கூட கொடுக்க முடியாத அரசாங்கத்தில் நீங்கள் இருக்க வேண்டுமா என எதிர்க்கட்சி எம்.பி.க்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நிமல் லான்ஷா ஆகியோர் அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் இராதாகிருஷ்ணன் நீங்கள் அரசாங்கத்தை அமையுங்கள்.அப்போது பார்க்கலாம் என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான விவாதத்தின்போதே இந்தச் சர்ச்சை இடம்பெற்றது.
அமைச்சர் இராதாகிருஷ்ணன் உரையாற்றத் தொடங்கியபோது குறுக்கிட்ட எதிர்க்கட்சி எம்.பி.யான மஹிந்தானந்த அளுத்கமகே:- தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ரூபா கூடக் கொடுக்காத இந்த அரசில் நீங்கள் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா? 50 ரூபா கொடுப்பதாக சொன்னீர்களே. அது எங்கே?அந்த 50 ரூபாவுக்கு ஒரு சுருட்டுக்கூட வாங்க முடியாது.
ஏன் ஒரு இறாத்தல் பாண் கூட வாங்க முடியாது. அரசை விட்டு எப்போது வெளியேறுவீர்கள்? 50 ரூபாவைக்கூட தோட்டத் தொழிலாளருக்குக் கொடுக்க மறுக்கும் இந்த அரசாங்கத்தில் நீங்கள் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா? என தமிழ் மொழியில் கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் இராதாகிருஷ்ணன்:- நான் 50 ரூபா கொடுப்பதாகக் கூறவில்லை. அமைச்சர் நவீன் திஸாநாயக்கதான் கொடுப்பதாகக்கூறினார். அந்த 50 ரூபாவை நாம் எப்படியும் பெற்றுக்கொடுப்போம். கொஞ்சம் பொறுத்திருங்கள். என்னை அரசை விட்டு வெளியேயுமாறு கூறுகின்றீர்கள்.
நீங்கள் முதலில் அரசொன்றை அமையுங்கள். அப்போது நான் அரசை விட்டு வெளியேறுவது தொடர்பில் யோசிக்கின்றேன் என அமைச்சர் இராதாகிருஷ்ணன் பதில் கூறினார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி எம்.பி.யான நிமல் லான்ஷாவும் தமிழ் மொழியில் உங்கள் தலைவர் திகாம்பரம் 50 ரூபா தருவேன் எனக் கூறினார் தானே என்றார். அப்போது எனது தலைவர் திகாம்பரம் அல்லவென அமைச்சர் இராதா கிருஷ்ணன் மறுத்தார்.
சரி அப்படியானால் 6 பேரைக்கொண்ட உங்கள் கூட்டம் தருவதாகச் சொன்னது தானே என நிமல் லான்ஷா எம்.பி.கேட்ட போது, உங்கள் நீர்கொழும்பில் பல பிரச்சினைகள் உள்ளன.
நீங்கள் முதலில் அதனைப் பாருங்கள். அங்கு கிறிஸ்தவ மக்கள் அடிபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள். 50 ரூபா பிரச்சினையை நாம் பார்க்கின்றோம் என அமைச்சர் இராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.
அது போல்தான் மலையகம்,கொழும்பு,ஊவா,சப்கமுவ, இன்னும் பல தோட்டங்களில் வாழும் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் உல்லன.அதற்கு இன்னும் தீர்வு இல்லை,ஆனால் சில அரசியல் வாதிகள் கிழக்கில் கட்ட பஞ்ஞாயத்து நடத்துவதை பார்க்கும் போது,சிரிப்பாகவும்,வேடிக்கையாகவும் உள்ளது.
ReplyDelete