வடக்குகிழக்கு முஸ்லிம்களின் அறியாமை - உடனடியாக விண்ணப்பியுங்கள்
யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் நஷ்டஈடு கோரி விண்ணப்பிக்காமை அறியப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளைச் சேர்ந்த அநேகர் அறியாமை காரணமாக விண்ணப்பிக்கத் தவறியுள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அசையும், அசையாத சொத்துகளுக்கும் மத நிலையங்களுக்குமான நஷ்டஈடுகளுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும்படி வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு பிரதியமைச்சர் காதர் மஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் அமைச்சு நஷ்டஈடுகள் வழங்கி வருகிறது என்றாலும் அறியாமை காரணமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்கள் நஷ்டஈடு கோரி விண்ணப்பிக்கத் தவறியுள்ளனர். அவ்வாறானவர்கள் வடக்கு அபிவிருத்தி மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சிடமிருந்து அதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதும் அவை ஆராயப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு நஷ்டஈடுகள் வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகளில் அமைச்சின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Please get the application form and address of the officers to be contacted regarding the compensation and publish that in the jaffna muslim. Com and in newspaper.
ReplyDeleteAlso ask Cader Masthan to publish this news in newspapers.
ReplyDeleteஇந்த நஷ்ட ஈடு ஜெனிவா தீர்மானத்திற்கு அமைய, இறுதி யுத்த கால்பகுதியில் பாதிக்கபட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது
ReplyDelete1990 முதல் பல தடவைகள் பதிந்தும் அவை பயனற்று போயிற்று
ReplyDelete1990 முதல் பல தடவைகள் பதிந்தும் அவை பயனற்று போயிற்று
ReplyDeleteAjan உங்க வவுணதீவில் சல்லட போட்டு தேடுயினம். சும்ம சத்தம்போடமா இரும்மப்பா.
ReplyDeleteபாதிக்கப்பட்டவர்கள் தான் விண்ணப்பிக்க போகிறார்கள். கிடைப்பவர்களுக்கு கிடைக்கட்டும்.
ReplyDelete@Abdulla, தேடவேண்டியது உங்க ISIS முஸ்லிம்களை தான்
ReplyDelete