Header Ads



நித்திரையினால் விபத்து - ஒருவர் பலி, மூவர் காயம்


அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி - மாத்தறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

இன்று (04) அதிகாலை 4.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அங்குணுகொலபெலஸ்ஸவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் கட்டுநாயக்க பகுதியில் இருந்து வெலிகம நோக்கி வெளிநாட்டு பிரஜைகள் இருவரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனின் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த வேனின் ஓட்டுனர் மற்றும் பேருந்து ஓட்டுனர் உட்பட நான்கு பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பின்னர் சிகிச்சை பலனின்றி வேன் ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.