பாராளுமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலியில், ஊருக்குப் பறந்தார் மஹிந்த
பாராளுமன்ற ஒத்திவைப்புக்கு பின்னர் அங்கிருந்து நேரடியாக ஹெலி மூலம் தனது ஊரான தங்காலைக்கு புறப்பட்டார் மஹிந்த ராஜபக்ச.
வார இறுதியில் பல்வேறு நிகழ்வுகளில் அங்கு கலந்து கொள்ளும் மஹிந்த மீண்டும் திங்கட்கிழமையே கொழும்பு திரும்புவார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நாளை மாலைதீவு செல்லவிருந்த மஹிந்த தற்போதைய அரசியல் நெருக்கடி காரணமாக அந்த பயணத்தை தவிர்த்ததாக அறிய முடிந்தது.

Post a Comment