Header Ads



ரணிலுக்கு ஆதரவான கையொப்பங்களை, ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள ஐ.தே.க.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், இந்த சந்தரப்பத்தில் குறித்த மனுவை கையளிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

இதனையடுத்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

அத்துடன், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றில் இரண்டு முறை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளார்.

இந்நிலையிலேயே, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணும் வகையில் ஜனாதிபதி இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பிதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.