கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின், பரிசளிப்பு விழா
ஒன்றேகால் நூற்றாண்டைக் கடந்து பயணிக்கும் இலங்கை முஸ்லிம்களின் முன்னோடிப் பாடசாலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி 2018 சனிக்கிழமையன்று பிற்பகல் 2.00 மணிக்கு கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
அதிபர் ரிஸ்வி மரைக்காரின் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக ஸாஹிராவின் பழைய மாணவரும், வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பேராசிரியர் தேசபந்து டியூலி டீ சில்வா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
Post a Comment