Header Ads



பாராளுமன்றத்தில் மகிந்த, நாளை விசேட உரை

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் -15- நாடாளுமன்றில் விசேட உரையாற்ற உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீண்ட நாளாக நீடித்திருந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

இதன் போது பிரமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருந்தது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 122 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதுடன், அது ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பல்வேறு தரப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே, பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் நாடாளுமன்றில் விசேட உரையாற்ற உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. He should tell what is the price of each MPs, who has crossed over.....

    ReplyDelete

Powered by Blogger.