Header Ads



மைத்திரி - மகிந்த அவசர இன்று காலை அவசர சந்திப்பு - இன்று 11.30 க்கு கட்சித் தலைவர்கள் கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருடன் நேற்று மாலை நடத்தப்பட்ட சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை மஹிந்தவிடம், மைத்திரி தெரிவித்துள்ளார் என அறியமுகின்றது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

2

நாடாளுமன்ற அமர்வு இன்று (16), பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(16) காலை 11.30 க்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இக் கூட்டம் இடம்பெறவுள்ளது. 

No comments

Powered by Blogger.