Header Ads



பாராளுமன்றத்தை கலைத்து விடுங்கள் - ஜே.வி.பி. கோரிக்கை


நாடாளுமன்றை கலைக்குமாறு ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்படாது, நாடாளுமன்றை கலைக்க வேண்டுமென ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களுக்கு வெட்கமோ, தார்மீக பொறுப்போ கிடையாது. இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களே இந்த தவறுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

அரசியல் பிரச்சினைகள் ஏற்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஜே.வி.பி மக்களுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் போராட்டத்தை ஆரம்பிப்போம் என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.