அரசியல் நெருக்கடிகளிடையே, பிரிட்டன் பறக்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
2018 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் லண்டனில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் ஜனாதிபதி பிரித்தானியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது அந்நாட்டு பிரதமர் திரேசா மேயுடனும், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளது அரச தலைவர்கள் பலருடனும் ஜனாதிபதி சந்திப்புக்களை நடத்த உள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 92ஆம் பிறந்த தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலில் பரபரப்பான நிலைமை நீடித்து வரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் புறப்பட்டுச் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last chance.....
ReplyDelete