Header Ads



இலங்கையின் பக்கம், ஹுசைனின் பார்வை - காத்திருக்கிறது நெருக்கடி

 ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும்  26ஆம் திகதி முதல்   மார்ச் மாதம்  23ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் 26 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் மற்றும்  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர். இதன்­போது இவர்கள் இரு­வரும் இலங்கை  தொடர்பில்    சில விட­யங்­களை முன்­வைப்­பார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இம்­முறை கூட்டத்  தொடரில் இலங்கை தொடர்­பான  இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ள­துடன்  இலங்கை குறித்து  பல்­வேறு அறிக்­கை­களும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன.  

இலங்கை தொடர்­பான விவா­தத்­தின்­போது ஐக்­கிய நாடுகள் மனித  உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை வெ ளியி­ட­வுள்­ள­துடன் அதில் அவர்     தனது   அதி­ருப்­தியை    வெ ளியி­டுவார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   

செய்ட் அல் ஹுசேனின் இலங்கை  குறித்த  மீளாய்வு அறிக்­கையை  தொடர்ந்து இலங்கை  அர­சாங்­கத்தின் சார்பில்  அறிக்கை ஒன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.  இதன்­போது வெளி­வி­வ­கார அமைச்சர்    இலங்­கையின் சார்பில் அறிக்­கையை முன்­வைப்பார் என்­ப­துடன்   இலங்­கை­யா­னது ஜெனிவா பிரே­ர­ணையை  எவ்­வாறு   அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்து  விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.  

இது இவ்­வாறு இருக்க இலங்கை  குறித்த  ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு  மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்ட போதிலும் பொறுப்­புக்­கூறல்   பொறி­முறை விட­யத்தில் இது­வரை சரி­யான முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்று      ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன்   கடும் அதி­ருப்­தியை வெ ளியி­ட­வுள்­ள­துடன்    பாரிய அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்­ள­தாக   எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன்  சர்­வ­தேச   அமைப்­புக்­களும்     37 ஆவது கூட்டத்  தொடரில்    இலங்கை   தொடர்­பாக பல்­வேறு விட­யங்­களை சுட்­டிக்­காட்டும் என்றும்   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

கடந்த  2015 ஆம் ஆண்டு இலங்கை  அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால்  இலங்கை குறித்த  பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

No comments

Powered by Blogger.