வயோதிப பிக்குமாருக்கு ஓய்வூதியம் - மைத்திரிபால இணக்கம்
இலங்கையில் உள்ள அனைத்து வயோதிப பிக்குமாருக்கும் ஓய்வூதியம் வழங்கும் வகையிலான காப்பீட்டுத் திட்டமொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மதம் தெரிவித்துள்ளார்.
தேசிய பௌத்த ஆலோசனைச் சபையின் கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பங்குபற்றிய பௌத்த பிக்குகள் தரப்பு, பௌத்த சமயத்தில் தேர்ச்சி பெற்ற பிக்குமாருக்கு ஆசிரியர் நியமனங்கள் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் ஜனாதிபதி சம்மதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அத்துடன் நல்லிணக்கம் தொடர்பான பொறிமுறைகளில் பௌத்த பிக்குமார் தலைமையிலான ஆலோசனைக்குழுவொன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.
why monks only what about others
ReplyDelete