மஹிந்த காலத்து திமிங்கிலங்கள், விரைவில் பிடிபடவுள்ளன - சதுர
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மோசடிகளில் தொடர்புடைய திமிங்கிலங்கள் இனி சட்டத்தின் பிடியில் மாட்டுவார்கள் என்று சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திசாநாயக்கவின் புதல்வரின் திருமணம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிரிசேன, புதல்வி சதுரிக்கா, சுதந்திரக்கட்சி இளைஞர் அணியின் பொருளாளர் திசர குணசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சுதந்திரக்கட்சி இளைஞர் அணியின் பொருளாளர் திசர குணசிங்கவுடன் உரையாடியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன,
மஹிந்த அரசாங்கத்தின் முறைகேடுகளுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு முறைகேடுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மட்டத்தினர் தண்டிக்கப்பட்டாலும் எதிர்வரும் நாட்களில் முக்கிய புள்ளிகள் பலரும் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
Post a Comment