Header Ads



போலி கடவுச்சீட்டில், இலங்கை வந்த ஈரானியர் கைது

இலங்கைக்கு போலி கடவுச்சீட்டு  மூலம் வந்த ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஈரானிய பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை மிக நுணுக்கமான முறையில் தொழிநுட்பத்தை பயன்படுத்தி போலியாக தயாரித்து இலங்கைக்குள் நுழைந்துள்ளார் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. 

குறித்த சந்தேக நபர் இலங்கை விமான நிலையத்திலிருந்து ஆஸ்த்திரியாவிற்கு செல்ல முற்படுகையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.

No comments

Powered by Blogger.