கிழக்கு மாகாண பட்டதாரிகளே..!
கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை, இலங்கை ஆசிரிய சேவையில் மாவட்ட அடிப்படையில் இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பல பாடங்களுக்கு இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தை வதிவிடமாக கொண்ட, 18 வயது தொடக்கம் 40 வயது வரையான வேலையற்ற பட்டதாரிகள், இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத்திகதி, இம்மாதம் 21ஆம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-Tm-
Post a Comment