Header Ads



164 மில்லியன் ரூபாவை செலுத்தாத மஹிந்த, ஆணைக்குழு முன் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட விளம்பரத்திற்காக ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய ரூபா 164 மில்லியனை செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் அங்கு ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில், கடந்த 16 ஆம் திகதி, குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் அன்றைய தினம் சமூகமளிக்க முடியாதிருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் (24) அவரை ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

No comments

Powered by Blogger.