Header Ads



உணர்ச்சிவசப்பட வேண்டாம், துஆ கேளுங்கள் - உலமா சபை ஆலோசனை

ARA.Fareel

தம்­புள்­ளையின் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வா­ச­லுக்கு கடந்த சில தினங்­க­ளாக விடு­க்­கப்­படும் சவால்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் உணர்ச்­சி­வ­சப்­பட வேண்­டா­மெ­னவும் அமைதி காக்கும் படியும் அல்­லாஹ்­விடம் துஆ கேட்கும் படியும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதிய இட­மொன்­றுக்கு இட­மாற்­றிக்­கொள்­வ­தற்­கான காணி ஒதுக்­கீட்டில் ஏற்­பட்­டுள்ள இழு­ப­றி­நிலை மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு விடு­க்­கப்­பட்­டுள்ள சவால்கள் தொடர்­பாக நேற்­றுக்­காலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பிர­தி­நி­தி­க­ளுக்கும் தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது. 

இக்­க­லந்­து­ரை­யா­டலின் போதே அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி இவ்­வேண்­டு­கோளை விடுத்­துள்ளார். அவர் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டலில் கருத்து தெரி­விக்­கையில்;

 ‘தம்­புள்­ளையில் யார் ­யா­ரெல்லாம் ஒரு இலட்­ச­மல்ல, ஒரு­கோடி கையொப்­பங்கள் சேக­ரித்­தாலும் எம்மை ஒன்றும் செய்­து­விட முடி­யாது. முஸ்­லிம்கள் இந்­நாட்­ட­வர்கள். அவர்­க­ளுக்கு இங்கே சகல உரி­மை­களும் இருக்­கின்­றன. ஜம்­இய்­யதுல் உலமா சபை முஸ்­லிம்­களை இறை­வ­னிடம் கையேந்­து­மாறே கேட்­கி­றது.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இருக்­கி­றார்கள். அவர்கள் நாட்டின் தலை­வ­ரிடம் கலந்­து­ரை­யாடி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்­றுத்­த­ருவர். நாம் அவ­ச­ரப்­ப­டக்­கூ­டாது. நிதானம் இழக்கக் கூடாது. பிரச்­சி­னை­களை நிதா­ன­மாக இரா­ஜ­தந்­திர ரீதியில் அணுக வேண்டும். நிச்­சயம் எமது உரி­மைகள் பாது­காக்­கப்­படும்.

முஸ்­லிம்கள் எவ­ருக்கும் அநி­யாயம் செய்­ய­வில்லை. எமது பள்­ளி­வாசல் இருக்கும் இடத்தை விட்­டுக்­கொ­டுத்து அதற்கு மாற்­றீ­டாக போதி­ய­ளவு காணி­யையே வேண்டி நிற்­கின்­றார்கள். இது நியா­ய­மா­ன­தாகும் என்றார்.

கலந்­து­ரை­யா­டலில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் எம்.ஐ.எம். கியாஸ் தலை­மையில் நிர்­வாக சபையின் பிர­தி­நி­தி­களும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உத­வி­செ­ய­லாளர் மௌலவி தாஸிம் உட்­பட மற்றும் பலர் கலந்து கொண்­டனர்.

1 comment:

Powered by Blogger.