Header Ads



பள்ளிகளை, பாதுகாக்குமா நல்லாட்சி..?

-ARA.Fareel-

சம­யங்கள் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்கே உரு­வா­கின. அனைத்துச் சம­யங்­களும் அன்பு, கருணை, சகோ­த­ரத்­துவம், நல்­லி­ணக்கம், மனி­தா­பி­மானம் என்­ப­வற்­றையே போதிக்­கின்­றன.   சமய வணக்­கஸ்­த­லங்கள் இந்த நற்­ப­ணி­யினை முன்­னெ­டுக்­கின்­றன. இவற்றை பள்­ளி­வா­சல்கள், பன்­ச­லைகள், கோயில்கள், ஆல­யங்கள் என்று வகைப்­ப­டுத்­தலாம். 

அப்­ப­டி­யென்றால் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும், நல்­லி­ணக்­கத்­தையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் போதிக்கும் கல்விக் கூடங்­க­ளாக செயற்­படும் பள்­ளி­வா­சல்கள் ஏன் தாக்­கப்­ப­டு­கின்­றன? எமது நாட்டில் பெரும்­பான்மை  இனத்தைச் சேர்ந்த சிலரால் பள்­ளி­வா­சல்கள் மீது ஏன் கை வைக்­கப்­ப­டு­கி­ன்றன? பள்­ளி­வா­சல்­களின் போத­னை­களை சகோ­த­ரத்­து­வத்தை பேரி­ன­வா­திகள் விரும்­ப­வில்­லையா? என்ற கேள்­விகள் இன்று மக்­க­ளி­டையே விடை­கா­ணாது, ஸ்தம்­பித்துப் போயுள்­ளன. 

எமது  நாட்டில் 2012 ஆம் ஆண்டு தம்­புள்ளை  ஹைரியா ஜும் ஆ பள்­ளி­வாசல் தாக்­குதல் முதல் சங்­கிலித் தொட­ராக தொடரும் தாக்­கு­தல்கள் ஏன் தடுத்து நிறுத்­தப்­ப­ட­வில்லை? இதன் பின்­னணி என்ன? என்ற கேள்­வி­க­ளுக்­கெல்லாம் உரிய பதிலை மக்கள் தேடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்­திலே பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் அதி­க­ரித்துக் காணப்­பட்­டன.  அக்­கா­லத்தில் பொது­பல சேனா, ராவண பலய, சிங்­கள ராவய போன்ற பெளத்த அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் அதி­க­ரித்­தி­ருந்­த­மையே இதற்குக் காரணம் எனக் கூறலாம். 

பள்­ளி­வா­ச­லுக்­கெ­தி­ரான செயற்­பா­டு­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ காலத்­திலும்  தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்­சி­யிலும்  பெளத்த குரு­மார்­களே பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­டுள்­ளார்கள், செயற்­பட்டு வரு­கி­றார்கள் என்­பதை எவ­ராலும் மறுக்க முடி­யாது. 

அன்­று­தொட்டு இன்று வரை பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் பள்­ளி­வா­ச­லுக்­கெ­தி­ரான சவால்­களைத் தீர்த்துக் கொள்­வ­தற்கு தொடர்ந்து போராடி வரு­கின்­றன. இதற்கு உதா­ர­ண­மாக தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தைக் குறிப்­பி­டலாம். தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் நான்­கரை வரு­டங்­களைக் கடந்து விட்ட நிலையில் தீர்­வின்றி கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் அமைச்­சர்கள் விரைவில் தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும், ஜனா­தி­ப­தி­யு­டனும்  பிர­த­ம­ரு­டனும்  கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறோம் என்று நாட்­களைக்  கடத்தி வரு­கி­றார்கள். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட பள்­ளி­வாசல் விவ­கா­ரங்­களைத் தீர்த்து வைப்­பதில் அச­மந்தப் போக்­கி­னையே கடைப்­பி­டித்து வரு­கிறார்.  தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்று சில வாரங்­களில் நிகழ்வொன்றின்போது அவரைச் சந்­திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்­தது. அப்­போது அவ­ரிடம் தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சினை இன்னும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. இதற்கு எப்­போது தீர்வு பெற்­றுக்­கொ­டுக்கப் போகின்­றீர்கள்? என்று நான் அவ­ரிடம் வின­வினேன். பொதுத் தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வுள்­ளது. பொதுத் தேர்தல் நடந்து முடிந்­ததும் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்குத் தீர்வு பெற்­றுக்­கொ­டுப்போம் என்று அவர் எனக்கு பதி­ல­ளித்தார்.

பொதுத் தேர்­த­லொன்று நடந்து முடிந்து இரண்டு ஆண்­டுகள் நிறை­வினை நாம் எதிர்­பார்த்­தி­ருக்­கிறோம். ஆனால் இது­வரை தம்­புள்ளை பள்­ளி­வா­சலைப் பற்றி ஜனா­தி­பதி வாய்­தி­றக்­க­வில்லை? ஏன் இந்த மௌனம்? பௌத்த பேரி­ன­வா­தி­க­ளுக்கு அவர் பயப்­ப­டு­கி­றாரா? என்ற கேள்­வி­க­ளுக்கும் நாம் விடை­காண வேண்­டி­யுள்­ளது.

தெலி­யா­கொன்ன பள்­ளி­வாசல் தாக்­குதல்
அண்­மையில் ஒரு வார­கா­லத்­துக்குள் இரண்டு பள்­ளி­வா­சல்கள் ஒரே மாவட்­டத்தில் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. முன்­னெப்­பொ­ழுதும் இல்­லா­த­வாறு ஒரு பள்­ளி­வாசல் வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு தாக்­கப்­பட்­டுள்ள நிலையில் அடுத்த பள்­ளி­வாசல் திங்­கட்­கி­ழமை அதி­காலை தாக்­கப்­பட்­டுள்­ளது. குரு­நாகல் நகர எல்­லைக்குள் அமைந்­தி­ருக்கும் ஜும்ஆ பள்­ளி­வாசல் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் கடந்த 4 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இரவு 11.23 மணி­ய­ளவில் தாக்­கப்­பட்­டுள்­ளது.

தாக்­குதல் சம்­பவம் இரவு 1.30 மணி­ய­ளவில் குரு­நாகல் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பொலிஸார் உடன் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். சி.சி.ரி.வி. கமரா பதி­வு­களைப் பெற்று விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டன. சி.சி.ரி.வி. கமரா பதி­வு­களின் படி தாக்­கு­தல்­தா­ரிகள் மகேந்­திரா ரக கெப் வண்­டி­யொன்­றிலே வருகை தந்­துள்­ளனர். கெப் வண்­டியில் வந்த மூவரில் இருவர் இறங்கி கற்­க­ளினால் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டுள்­ளனர். அவர்கள் ரீ சேர்ட்டும் தலையில் தொப்­பி­ய­ணிந்தும் இருந்­துள்­ளனர். இவ்­வி­ப­ரங்கள் சி.சி.ரி.வி. கம­ராவில் பதி­வா­கி­யுள்­ள­தாக குரு­நாகல் பொலிஸார் தெரி­வித்­துள்­ளார்கள். எனவே இந்தத் தாக்­குதல் திட்­ட­மிட்டே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றமை தெளி­வா­கி­றது. பள்­ளி­வாசல் மூடும் நேரம் போன்ற விப­ரங்­களை அறிந்தே தாக்­கு­த­லுக்கு அவர்கள் சென்­றுள்­ளனர். தாக்­குதல் நடத்­திய கற்­க­ளையும் அவர்கள் தம்­மு­டனே கொண்டு வந்திருந்தனர்.

நிக்­க­வ­ரெட்­டிய நகர் பள்­ளி­வாசல் தாக்­குதல்
குரு­நாகல் மாவட்­டத்தில் தெலி­யா­கொன்ன ஜும்ஆ பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு இரு தினங்­களின் பின்பு அதே மாவட்­டத்தில் திங்­கட்­கி­ழமை அதி­காலை நிக்­க­வ­ரெட்­டிய நகர் ஜும்ஆ பள்­ளி­வாசல் பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யமை முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மல்ல அனைத்து மக்­க­ளையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. முஸ்­லிம்கள் பீதிக்­குள்­ளா­கி­னார்கள்.  பெற்றோல் குண்டுத் தாக்­கு­தல்­களால் எவ­ருக்கும் காயம் ஏற்­ப­டாத போதும் பள்­ளி­வா­சலின் பொருட்­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ளது. தாக்­குதல் சந்­தேக நபர்­களைக் கைது செய்­வ­தற்கு நிக்­க­வ­ரெட்­டிய பொலிஸ் அத்­தி­யட்­சகர் சஞ்­சீவ பண்­டா­ரவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் மூன்று பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­பட்­டுள்­ளன.

சம்­பவ தினம் இஷாத் தொழு­கையின் பின்பு பள்­ளி­வாசல் மூடப்­பட்­டது. பள்­ளி­வாசல் தினம் இரவு 10 மணிக்கு மூடப்­பட்டு அடுத்த நாள் அதி­காலை 4.30 மணிக்கே திறக்­கப்­ப­டு­கின்­றமை வழக்­க­மாகும்.  சம்­பவ தினம் அதி­காலை 1.30 மணிக்கும் 2.10 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் பள்­ளி­வா­சலின் வாயிலும் கேட்டும் மூடப்­பட்­டி­ருந்த நிலையில் யன்­ன­லுக்கு மேல் பகுதி யன்னல் உடைக்­கப்­பட்டு 5 பெற்றோல் குண்­டுகள் பள்­ளி­வா­ச­லுக்குள் எறி­யப்­பட்­டுள்­ளன. ஒரு பெற்றோல் குண்டு எறியும் போது வெடித்­துள்­ள­துடன் நான்கு குண்­டு­களில் மூன்று வெடிக்­காத நிலையில் பள்­ளி­வா­ச­லுக்­குள்­ளி­லி­ருந்து பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டுள்­ளன. மற்­றைய குண்டு பள்­ளி­வாசல் உட்­சு­வரில் வீழ்ந்து வெடித்­துள்­ளது. 

இப் பெற்றோல் குண்டுத் தாக்­குதல் அதி­காலை 4.30 மணிக்கு பள்­ளி­வா­சலைத் திறப்­ப­தற்குச் சென்ற முஅத்­தி­னி­னாலே கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. பின்பே நிக்­க­வ­ரெட்­டிய பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வாசல் பிர­தான நுழை­வா­யி­லுக்கு மேலால் உள்ள கண்­ணாடி உடைக்­கப்­பட்டு அங்கு இடப்­பட்­டி­ருந்த புடை­வை­யி­லான திரை நீக்­கப்­பட்டே குண்டு எறி­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது. பொலிஸ் தட­ய­வியல் பிரிவில் தட­யங்கள் ஊடாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். விசா­ர­ணை­க­ளுக்­காக இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரின் அறிக்கை மற்றும் குற்­ற­வியல் தர­வுகள், உளவுத் துறை­யி­னரின் தக­வல்­களும் பெற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. 

பள்­ளி­வா­சலில் சி.சி.ரி.வி.கமரா பொருத்­தப்­பட்­டி­ருக்­கா­மை­யினால் அறி­வியல் ரீதி­யான சான்­று­களைப் பெற்றுக் கொள்­வதில் தடைகள் இருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். எனினும் சந்­தேக நபர்கள் தாக்­கு­த­லுக்கு வருகை தந்த பாதை­களில் உள்ள கண்­கா­ணிப்பு சி.சி.ரி.வி.கம­ராக்­களின் பதி­வு­களை பொலிஸார் பெற்றுக் கொண்­டுள்­ளனர். 

புதிய பள்­ளி­வா­சலே தாக்­கப்­பட்­டது
நிக்­க­வ­ரெட்­டிய நகரில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு ஐந்து மாதங்­க­ளுக்கு முன்பு திறந்து வைக்­கப்­பட்ட புதிய பள்­ளி­வா­சலே தாக்­கப்­பட்­டது. இப்­பள்­ளி­வாசல் பழைய பள்­ளி­வா­ச­லுக்கு அடுத்தே நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.  புதிய பள்ளிவாசலில் இரவில் எவரும் தங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிவாசலின் முஅத்தீன் பழைய பள்ளிவாசலிலே இரவில் தங்குவது வழமையாகும். புதிய பள்ளிவாசல் இரவு 10 மணிக்கு பூட்டப்பட்டால் அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கே திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

No comments

Powered by Blogger.