Header Ads



நியூசிலாந்திற்கு விமானம் பறக்க, எழுந்துசென்ற ரணில்..!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பறக்கும் விமானத்தில் ஆசனத்தை விட்டு எழுந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் சிங்கப்பூரை சென்றடைந்துள்ளனர்.

நாளை அவர்கள் நியூசிலாந்து சென்றடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விமானத்தில் பயணம் செய்த ஏனைய பயணிகளுடன் பேசுவதற்காக ஆசனத்தை விட்டு எழுந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் பயணித்த பிரபல வர்த்தகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ரணில் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களான சாகல ரட்நாயக்க, ஹரின் பெர்னாண்டோ, ஹர்ச டி சில்வா, சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் பிரதமருடனான நியூசிலாந்து விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.