Header Ads



இதுவா நல்லாட்சி..? முஸ்லிம் என்பதால் MR லத்தீப் திட்டமிட்டு புறக்கணிப்பு..!


விசேட அதிரடிப்படை தலைவராக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், எம் ஆர் லத்தீப் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டபோதும் அவர் பணிகளை ஏற்றுக்கொள்ள இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உயர் அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 4ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைய, லத்தீப்பின் பெயரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் பரிந்துரைத்தது.

இதன்படி அவர் ஆகஸ்ட் 9ஆம் திகதி முதல் தமது கடமைகளை பொறுப்பேற்கவேண்டும்.

எனினும், அவர் பதவிவிலகவேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் அரசியல்வாதி ஒருவரின் மகனே இந்த அழுத்தங்களை கொடுத்துவருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று இது தொடர்பாக பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லத்தீப், விடுதலைப்புலிகளுக்கு எதிராக லண்டன், பேங்கோக், ஜெனிவா ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்ஸின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_791.html

2 comments:

  1. Whu is making the decision government or any other single person.

    ReplyDelete

Powered by Blogger.