மாடு அறுப்புக்கு எதிராக, மீண்டும் போராட்டம் - சிங்ஹலே அறிவிப்பு
-விடிவெள்ளி ARA.Fareel-
இலங்கையில் மாடுகள் அறுப்பதற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக சிங்ஹ லே அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மாடுகள் அறுப்பதற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக சிங்ஹ லே அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இப்போராட்டத்தை ஆரம்பித்து இலட்சக்கணக்கானோரின் கையொப்பத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் மகஜர் ஒன்றினைச் சமர்ப்பித்தும் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவில்லை என அவ்வமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மாடுகள் அறுப்பதற்கு எதிரான சிங்ஹ லே அமைப்பின் கோரிக்கைகளை மீண்டும் ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிங்ஹ லே அமைப்பின் செயலாளருமான மெதில்லே பஞ்சாலோக தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மாடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பேராட்டத்தில் பௌத்த குருவொருவர் தீ வைத்துக்கொண்டு உயிரிழந்தார். போவத்தே இந்திர ரத்ன தேரர் கண்டியில் இவ்வாறு உயிர்த் தியாகம் செய்து கொண்ட பின்பு கூட அரசாங்கம் மாடு அறுப்பதை நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் விரைவில் மீண்டும் எமது போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
மாட்டிறைச்சி உண்பதைத் தடுக்க நாம் விரும்பவில்லை. அவ்வாறு உண்பது அவர்களின் உரிமையாகும். அதனால் மாட்டிறைச்சி உண்ணும் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மக்களின் மாட்டிறைச்சி தேவையை நிறைவேற்றவதற்காக அரசாங்கம் வெளி நாட்டிலிருந்து இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டும் எனக் கோரவுள்ளோம்.
எமது இந்த எதிர்ப்பு போராட்டத்தில் இந்து மற்றும் ஏனைய மக்களின் ஆதரவையும் பெற்று அவர்களையும் இணைத்துக்கொள்ளவுள்ளோம். இந்து மதத்தவர்கள் மாடுகளை தமது தெய்வமாக வணங்குகிறார்கள்.
பௌத்தர்கள் நாம் எமக்கு பால் புகட்டும் தாயின் அடுத்த ஸ்தானத்தில் பசுமாடுகளைக் கருதுகின்றோம். அதனால் மாடுகள் அறுக்கப்படக்கூடாது என்ற கொள்கையுடையவர்களாக இருக்கிறோம். இலங்கையில் தினம் 5 ஆயிரம் மாடுகள் அறுக்கப்படுகின்றன. பௌத்த நாடான இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவதைத் தடை செய்யும்படி ஜனாதிபதியைக் கோரவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
Fist of all BBS & Singele must been sluaghtes, then only there will be peace in the country.
ReplyDeleteசரி ஹஜ்ஜின் ஒரு கடமையான குர்பான் முன் வரவுள்ளது இவர்கள் இப்போதே அதற்கான அடித்தாளம் இடுகின்றனர் என்னவோ இலங்கையில் முஸ்லிம்கள் மட்டும்தான் மாட்டிறைச்சி பிரியர்கள் மற்றும் உண்பவர்கள் போல் இவர்களின் கூற்று உள்ளது. இவர்களின் அடிப்படை நோக்கம் என்ன வென்பதே தெரியாது. மண்டையில் முடி இல்லாத இவர்களை என்ன சொல்வது என்றே தெரியாது.
ReplyDeleteஎனக்கு ஓன்று மட்டும் விளங்காது அது எதுவென்றால் இலங்கையில் மாடு அறுத்தால் அம்மாடுகள் தாயின் அந்தஸ்தில் உள்ளவை அனால் வெளிநாட்டில் அறுத்தால் அம்மாடுகள் எந்த அந்தஸ்தில் இவர்கள் பார்கின்றனர். ஏன் இவர்களுக்கு புரியாது எந்த நாட்டில் இருந்தாலும் அது மாடு மாடுதான் ஒரு நாளும் அது ஆடாக மாறது.
இவர்கள் மாட்டின் பால் குடிப்பதால் அது தாயின் இஸ்தானதுக்கு பார்கின்றனர் அப்படியாயின் உண்மையில் வெளிநாட்டில் அறுக்கப்படும் மாடுகளைதான் உண்னப்படாது காரணம் அவுஸ்த்ரேலிய போன்ற நாடுகளில் பால் கரந்து முதுமையான மாடுகளைதான் கூடுதலாக அறுத்து வெளிநாடுகளுக்கு அனுப்புவார்கள். அதேநேரம் இந்த மாடுகளை வைத்து கறந்த பால் தான் பால்மாவகா அது அறுக்க முன்னர் நாங்கள் அறுந்தி முடிக்கின்றோம்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் குர்பான் காலங்களில் இந்த நாட்டு சட்டதிட்டங்களை மதித்து அதற்கு ஏற்றவாறு எமது கடமைகளை முறைப்படி செய்தால் யாருக்கும் எந்த கேள்வியும் இல்லாமல் இருக்க வழி சமைக்கும் அதேநேரம் இந்த குர்பான் அறுப்பு விடயங்களை முக்கியமாக மாட்டின் கையிற்றை பிடித்து ஒரு போட்டோ அறுக்கும் பொது ஒரு போட்டோ பின் உரிக்கும் பொது ஒரு போட்டோ பின் பார்சல் பண்ணி பங்கீடு பண்ணும் பொது ஒரு போட்டோ இப்படியாக A To Z வரை போட்டோ பிடித்து FACEBOOK பதிவு இடுவதை முற்றாக தவிர்க்குமாறும் மிக பணிவன்புடன் இதை படிக்கும் அனைவரிடமும் அதேநேரம் இதை படிக்காத இன்றைய இளம் சமுகதிருக்கும் எதிவைக்குமாரும் கேட்டு கொள்கின்றேன் .
I think, there must be a business plan behind all these, they want to export beef, therefore they are trying to stop slaughtering. Then they can buy it for low price.
ReplyDeleteMr,ishak a.raheem wel said thanks for u r openion
ReplyDeleteவோதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறுகிறது எனவே மரத்தை வெட்டி வோரை பிடுங்கி எரிய வேண்டும் .அல்லாஹ்விடம அணைவரும துவா செய்யும்போது நிச்சயம் அல்லாஹ் வெற்றி யைத் தருவான.அலஹம்துலில்லாஹ்
ReplyDelete