is தீவிரவாதிகளை விட, மிகப்பெரிய தீவிரவாதி ஆசாத் - எர்டோகன்
சிரிய அதிபர் ஆசாத் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட பெரிய தீவிரவாதி என்று துருக்கி கடுமையாக வசைபாடியுள்ளது.
சிரிய எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள கில்லிஸ் பகுதியில் துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்டோகன் பேசுகையில்,
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போருக்கும், அதனால் ஏற்பட்ட 6 லட்சம் உயிரிழப்புகளுக்கும் மூலக்காரணமாக இருந்தவர் அதிபர் ஆசாத்துதான். ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மிகப் பெரிய தீவிரவாதி ஆசாத் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்கொலைப்படை தாக்குதல் நடந்த துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு ரகசியமாக வருகை தந்த அதிபர் எர்டோகன் அங்கு வைக்கப்பட்டிருந்த தாக்குதலில் உயிரிழந்த விமான நிலைய பணியாளர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், துருக்கியில் உள்ள சிரிய அகதிகளுக்கு துருக்கி குடியுரிமை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
Iya.. periyaware..
ReplyDeletePozum. ..Iniyum arikkai wida wendam.
Syriyawil allorayum Asad koli panni mudinda pinnal poi paarunkal...