முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும் - ACJU உருக்கமான வேண்டுகோள்
நாட்டில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் ரமழான் மாதம் முழுவதும் ஆன்மீகப் பயிற்சி பெற்று தர்மங்கள் வழங்கி நல் அமல்கள் செய்துள்ள நாம் எமது நற்பண்புகளைப் பேணிப் பொறுமை காக்க வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்தில் சிறுபான்மையினராக வாழும் நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விடக்கூடாது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் இலங்கை முஸ்லிம்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஞானசார தேரர் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாகக் கருதும் அல்லாஹ்வையும் முஹம்மது நபியையும் அவமதித்துப் பேசியுள்ளமைக்கு அவருக்கு எதிராக உலமா சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளது.
ஏனைய முஸ்லிம் அமைப்புகளும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளன.
ஒரு மாதகாலம் நாம் தொடராக ஆன்மீகப் பயிற்சிகள் பெற்றிருக்கிறோம். பசித்திருந்து நோன்பு நோற்று அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறோம். நிச்சயம் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பான்.
அதனால் நாம் உணர்ச்சிவசப்படாது நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.
ரமழான் மாதத்தில் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சக வாழ்வினையும் பலப்படுத்தும் வகையிலான இப்தார் நிகழ்வுகள் நடந்தேறின.
இராணுவமும் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வுகளில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடுமே வலியுறுத்தப்பட்டன. எனவே நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் பெரும்பான்மையினர் இனநல்லிணக்கத்தையும் நல்லுறவையுமே ஆதரிக்கின்றனர். ஒரு சிறிய குழுவினரே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றனர்.
இந்த இனவாதக் குழுவினர் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். அதனால் நாம் பண்பாட்டாளர்களாக ஏனைய மதங்களையும் கௌரவிப்பவர்களாக இருக்க வேண்டும்.
உலமா சபை இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சக வாழ்வினையும் வளர்ப்பதற்காக பல செயற்திட்டங்களை வகுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
நாட்டின் சட்டத்தை மதிப்பவர்களாகவும்; சட்டத்தை மீறாத நற்பண்புள்ள முஸ்லிம்களாக ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியாகவும் நாம் வாழவேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
றஸுலுல்லாஹ்வின் மக்கா வாழ்வு எமது பொறுமைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
ReplyDeleteMuslims need to be always wise. because of the current political situation in Sri Lanka will try to use Muslim as their political tool to change people minds.
ReplyDeleteஞானசார தேரரை நேரடியாக விவாதத்திற்கு அழைத்து பகிரங்க மாக விளக்கம் கொடுக்க உலமா சபைக்கு முடியாதா? இதனூடாக சிங்கள மக்கள் விளக்கம் பெறுவார்கள். ?
ReplyDeleteLodge a file in court rather than bagging to Maithri.
ReplyDeleteசிறுபான்மையாக மக்காவில் ரசூலுல்லாஹ் எவ்வாறு வாழ்ந்ந்தார்கள் என கவனமாய் ஆராய்ந்து படிப்பினை பெற வேன்டும். அதுவே சோதணைகளின் போது எமக்கு வழி காட்டல்.
ReplyDeleteஇவனை கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் செரியான வழி இவனைப்பற்றி எந்தக் கூட்டத்திலும் பத்திரிகையாளர் மாநாட்டிலும் பேசவே கூடாது பத்திரிகையாளர்கள் தோண்டித்தோண்டி கேட்டாலும் அதைப்பற்றி பேச விரும்பவில்லை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அரசாங்கமும் பாதுகாப்பு துறையும் பார்த்துக்கொள்ளும் என்ற பதிலை மட்டுமே அனைவரும் கொடுக்க வேண்டும் இவன் பெயரையோ இவனின் இயக்கத்தின் பெயரையோ இழுத்து பேச வேண்டிய அவசியம் இல்லை இவன் முடிந்த அளவுக்கு குரைத்துவிட்டு ஓய்வான் இவ்வாறு நாம் அமைதியான நம்முடைய வேலையை செய்யும் போது பெரும்பான்மை இன மக்கள் அவனுக்கு தகுந்த பதிலை கொடுக்கும் அதுவரை பொறுமை காப்போம் இன்ஷா அல்லாஹ் வெற்றி எப்போதுமே நம்பக்கம்தான்
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்.
DeleteNo any debates with foolish peoples. That is useless
ReplyDeleteI honor the ACJU for not doing anything for the sake of Muslim ppl except of publishing unwanted statement and worked with enemies of Muslims' to ban the entrance of scholar of SLTJ into the country.
ReplyDeleteசரீப் தீன் அவர்களே உலமா சபையோடு விவாதிக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது இவன்இவனின் இமேஜை கூட்டிக் கொள்ள ஊளைவிட்டு திரிகிறான் கண்டுக்க வேண்டிய அவசியம் இல்லை
ReplyDeleteI have my suspicious wheather ACJU and Bodu Bala Sena have some underground dealings. Previously ACJU had close ties with Gotta and Mahinda, and due to the strong relationship, ACJU had enjoyed many privilages incluing Geneva Trip on public expenses. Upto now ACJU has not condemned the activities of BBS and always order the muslim community to remain silence, even during Aluthgama and Beruwala violence.
ReplyDeleteI thnink the time has come to reject the commmad of ACJU and Muslims have to get togeather and initiate appropriate action against BBS.
I totally agree with u bro...better these mufthi's wear a hijab's....they just cowardly people..
Delete