Header Ads



UNP யில் பொன்சேகா இணைவது குறித்து, நாளை ரணில் தலைமையில் முக்கிய தீர்மானம்

ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்னும் சில தினங்களில், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தற்போது ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்று செயற்பட்டு வருவதோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலிலேயே பொன்சேகாவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், நாளை -28- பிரதமர் தலைமையில் இது குறித்து முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

No comments

Powered by Blogger.