Header Ads



"மஹிந்தவை விரட்டிவிட்டால் பிரச்சினைகள், ஏற்படாதென எதிர்பார்த்த முஸ்லிம்களுக்கு ஏமாற்றம்"

இன்னமும் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் இனவாத பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டுமாயின் முஸ்லிம்க‌ள் எதிர் த‌ர‌ப்பு அர‌சிய‌ல் க‌ட்சியையும் ப‌ல‌ப்ப‌டுத்துவ‌தினூடாக‌வே த‌ம‌து பள்ளிவாய‌ல் இன‌வாத‌ பிர‌ச்சினைக‌ளை தீர்த்துக்கொள்ள‌ முடியும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கண்டி லைன் பள்ளிவாயல் மற்றும் தொடர்ச்சியான இனவவாதம் பற்றி கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் தெரிவித்ததாவது,

மஹிந்தவை விரட்டி விட்டால் பள்ளிவாயல் பிரச்சினை, முஸ்லிம் விரோத பிரச்சினைகள் ஏற்படாது என்று சமூகம் எதிர் பார்த்து இன்று ஏமாந்து போயுள்ளதை காண்கிறோம்.  மஹிந்தவுடன் இருக்கும் இனவாத கட்சியான ஹெல உறுமய மைத்திரி, ரணிலுடன் கூட்டு சேர்ந்ததால் இதே பிரச்சினை தொடரும் என உலமா கட்சி மிகத்தெளிவாக கூறியது. ஜனாதிபதி தேர்தலின் போது ஹெல உறுமய மஹிந்தவை விட்டு வெளியேறியதால் இனி மஹிந்தவை முஸ்லிம்கள் ஆதரிக்கலாம் என்றது  உலமா கட்சியின் தலைமை. ஆனாலும் அவரது பேச்சைப்பற்றி சிந்திக்காமல்,  கேளாமல் முழு இலங்கை முஸ்லிம்களும் முபாறக் மௌலவியை கண்ணா பின்னா என்று ஏசியதுடன் உணர்வு பூவமாகவே சிந்தித்தனர். அதன் விளைவு எதிரே வரப்போகும் அரசுடன் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பேசாமல், உடன்படிக்கை எதுவும் செய்யாமல் முஸ்லிம் சமூகம் தன்பாட்டில் சுயமாக முடிவெடுத்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது. இப்போது மீண்டும் இனவாத செயல்கள் கண்டு முஸ்லிம்களும், முஸ்லிம் எம் பிமாரும் தலையிலடித்துக்கொள்கிறார்கள். உலமா கட்சி அன்றும் இன்றும் என்றும் உண்மையையே பேசும் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.

நமது நாடு ஒரு ஜ‌ன‌நாய‌க‌ நாடு என்பதால் பதவிகளை பெறுவதன் மூலம் சில அபிவிருத்திகளை வெல்லலாமே தவிர உரிமைகளையோ, இனவாதத்தை ஒழித்தலையோ பெற முடியாது. ஆனால் எதிர்க்கட்சி அரசியலாலும் சிலதை சாதிக்க முடியும் என்பதே ஜனநாயக நாட்டின் சிற‌ந்த‌ வ‌ழியாகும்.

ஒரு காலத்தில் த‌மிழ் ம‌க்க‌ள் த‌ம‌து சிவில் அமைப்பின‌ரை ப‌ல‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளை முன்னிலைப்ப‌டுத்தி த‌ம‌து போராட்ட‌த்தை முன்னெடுத்து பார்த்த‌ன‌ர். பின்ன‌ர் ஆயுத‌ம் தூக்கிப் பார்த்த‌ன‌ர். சில‌ர் அமைச்சு ப‌த‌விக‌ளை பெற்றும் பார்த்த‌ன‌ர். ச‌ரிவ‌ர‌வில்லை. க‌டைசியில் எதிர்க்க‌ட்சி ஜ‌ன‌நாய‌க‌ அர‌சிய‌லால் ஓர‌ள‌வு த‌ம‌து பிர‌ச்சினைக‌ளை ச‌ர்வ‌தேச‌ ம‌ய‌ப்ப‌டுத்துவ‌தில் இன்று வெற்றி க‌ண்டுள்ள‌ன‌ர்.



முஸ்லிம்க‌ளை பொறுத்த‌வ‌ரை ஒரு க‌ட்சிக்கு அதிகார‌ம், ப‌த‌விக‌ள் இருக்கின்ற‌தா என்று பார்த்தே அத‌ற்கு பொது ம‌க்க‌ள் ஆத‌ர‌வ‌ளிக்கும் மோச‌மான‌ இழி நிலை ச‌மூக‌த்தில் காண‌ப்ப‌டுகிற‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ள் என்றால் ஏதும் ப‌த‌விக‌ள் என்ற‌ எலும்புத்துண்டை போட்டுவிட்டால் போதும் அவ‌ர்க‌ளுக்கெதிரான‌ அனைத்து இன‌வாத‌ செய‌ல்க‌ளையும் தாராளமாக முன்னெடுக்க‌லாம் என்ப‌தை அனைத்து பேரின‌வாத‌மும் தெரிந்து வைத்துள்ள‌ன.

அமைச்ச‌ர்க‌ளும் க‌ட்சி பிர‌முக‌ர்க‌ளும் ப‌த‌விக‌ளுக்காக‌ அலைகிறார்க‌ள் என‌ ஒப்பாரி வைக்கும் முஸ்லிம் பொது ச‌ன‌மும் ப‌தவிக‌ள் உள்ளோரின் பின்னால் ஓடுவ‌தையே பெருமையாய் நினைக்கின்றது. த‌ம‌க்காய், த‌ம‌து ச‌மூக‌த்தின் உரிமைக்காய் எந்த‌ ப‌த‌வியையும் பெறாம‌ல் உயிரை பணயம் வைத்து செய‌ற்ப‌டுவோரை இந்த‌ ச‌மூக‌ம் ப‌ல‌ப்ப‌டுத்த‌ முனைகிற‌தா? இல்லை. அவ‌ர்க‌ளை நையாண்டி ப‌ண்ணுவ‌தில்தான் ச‌ந்தோச‌ப்ப‌டுகிற‌து.

இன்றைய‌ சூழ‌லில் எந்த‌க்க‌ட்சி ப‌த‌விக‌ளை பெறாம‌ல் ச‌மூக‌த்துக்காக‌ பேசுகிற‌தோ அந்த‌ முஸ்லிம் கட்சியை முஸ்லிம் ச‌மூக‌ம் ப‌கிர‌ங்க‌மாக‌ ஆத‌ரிப்ப‌த‌னூடாக‌, அந்த‌க்க‌ட்சிக்கு ஆத‌ர‌வாக‌ ச‌மூக‌ம் தானாக முன் வ‌ந்து ஆத‌ர‌வு கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துவ‌த‌னூடாக‌ மட்டுமே இன‌வாத‌ செய‌ல்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்கும் அர‌சையும், ப‌த‌விக‌ள் பெற்ற‌த‌னால் கையாலாகாம‌ல் இருக்கும் முஸ்லிம் க‌ட்சிக‌ளையும் நமக்கு ஆதரவாக திருப்ப முடியும். முஸ்லிம்க‌ள் ப‌த‌வி பெறாத‌ முஸ்லிம் க‌ட்சி பின்னால் திரள ஆரம்பித்து விட்டார்கள் என்ற செய்தி அர‌சுக்கும், பதவிக்காய் அலையும் முஸ்லிம் கட்சியினருக்கும்  அச்ச‌த்தை ஏற்ப‌டுத்தும். இப்ப‌டியே போனால் த‌ம‌க்கும் த‌ம‌து ஆத‌ர‌வு க‌ட்சிக‌ளுக்கும் முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ள் கிடைக்காது போகும் என்ற‌ அச்ச‌ம் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ள் முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ளை க‌வ‌ன‌த்திற்கொள்வார்க‌ள். அர‌சாங்க‌த்தை பொறுத்த‌வரை ஆயுத‌த்துக்கு ப‌ய‌ப்ப‌டாது. வாக்குக‌ள் என்ற‌ ஆயுத‌த்துக்கே ப‌ய‌ப்ப‌டும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக‌வே முஸ்லிம்க‌ள் த‌ம‌க்காக‌ துணிச்ச‌லுட‌ன் பேசும், ப‌த‌விக‌ள் எதையும் பெற‌க்கூடிய‌ சாத்திய‌ம் இருந்தும் அவ‌ற்றை பெறாம‌ல் க‌ள‌த்தில் நிற்கும் உல‌மா க‌ட்சியை ப‌கிர‌ங்க‌மாக‌ ஆத‌ரிக்க‌ முன் வந்தால் நிச்ச‌ய‌மாக‌ ந‌மக்கு எதிரான‌ அர‌சிய‌லில் மாற்ற‌த்தை காண‌லாம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

14 comments:

  1. தவிச்ச முசல் அடிப்பது இதுதான் அதாவது மழை வெள்ளதில் முயல்கள் திடலில் ஒதுங்கி நிர்கதியாகி பயத்தில் குந்திக்கொண்டு இருக்கும் இதை பயன்படுத்தி வேட்டையாடுவது வழமை அவ்வாறு ஒரு நிலைபோல் பயன்படுத்த நினைக்கும் இவரின் எதிர்பார்த்து நடக்குமா பொறுத்து இருந்து பார்ப்போம்

    ReplyDelete
  2. Why this so called Ulama is very lunatic? All this current problems were created by Mahinda faction. None of political parties with Government not involved. I learned in your website even Champika granted permission to renovate Dehiwela Masjid. Don't do your cheap politics here.

    ReplyDelete
  3. Neenga 2 pakkamum panam edukkurazu therium. Ongada leader my3 oda. So neenga angala sambalam. Ongada thenji pona katchi mahinda pakkam. Angalem panam. So ongalukku no problem

    ReplyDelete
  4. Intension should be good.allah only can do everythimg.

    ReplyDelete
  5. இந்த மனிசனின் தொல்ல தாங்க முடியல. யாராவது எதையாவது கொடுத்து இந்த மனிதனை சாந்தப்படுத்துன்களேன்.
    அப்போ முஸ்லிம்கள் மைத்திரியை ஆதரித்தது பிழையான விடயம் என்று சொல்கிறீர்கள்...!!!!!!!....?????

    ReplyDelete
  6. Wow! look who is talking about 'BONES'. When you were told to think and speak for the whole Sri Lankan Muslim society, all you wanted was an MP for Kalmunai and you got Harees already. The blabber you engage yourself lately makes me wonder Harees did not throw any BONE at you to keep your mouth busy biting, it seems. And that's why go around and you whine with pain in your a@@. Seriously- are you any fit to talk for the Muslim society?

    Now why do you make all these weird moves on media? What is your problem? You want Mahinda back or you want to become an MP and go to parliament and bite the BONES you are talking about?

    If you are all SINCERE and CARING for the Muslim society, let them hear 'Mubarak moulavi battled and assaulted a couple of guys that attempted to stop the construction work at Bathya Masjid!'. Let us see if you have any BACKBONE before you talk about Muslims biting BONES.

    ReplyDelete
  7. Wrong intension.may allah forgive

    ReplyDelete
  8. ரமழானில் ஷைத்தனைக் கட்டிப்போட்டும் கூட பிரச்சினை தீரவில்லை,மகிந்தவை விரட்டிவிட்டால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

    ReplyDelete
  9. பதவிகளுக்கு ஆசை படாவிட்டாலும், ராஜபக்சவின் எலும்புதுண்டுகளுக்கு அடிமையாய் இருக்கும் ஒரு கட்சி என்றால் இந்த ஷியா காபீர் முபாரக்கின் கட்சி. சமுதாய நலன் பற்றியும் முஸ்லிம்களின் நலன் பற்றியும் பேச நீர் துளியளவும் தகுதியற்றவன். போய் ராஜபக்ச வீட்டிற்கு கொள்ளை புறமாக போய் துணி துவைக்கும் வேலை ஏதும் இருந்தால் கவனிங்க. பெருநாள் துணிமணிகள் எடுக்க உதவியா இருக்கும்

    ReplyDelete
  10. தமிழர்களின் அரசியலோடு முஸ்லிம்களின் அரசியலை ஒப்பீடு செய்யமுடியாது. மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து முஸ்லிம்களின் உரிமைகளையும், அபிலாஷைகளையும் எவ்வாறு வென்றெடுக்க முடியும் என்பதை அழகாக காட்டித்தந்தார்கள். அரசியல் அதிகாரம் என்பது நமது உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய ஆயுதம் என்பதையும் நிதர்சனமாக சொல்லிவைத்தார்கள். எனவே எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும் முஸ்லிம்கள் ஆளும்கட்சியில் இருந்தால்தான் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வெல்ல முடியும் என்பதும், அவ்வப்போது இனமுறன்பாடுகள் ஏற்படும் பொழுது பேரம்பேசும் சக்தி உள்ள அதிகாரம் இருப்பதனால்தான் ஓரளவாவது நியாயம் கிடைக்கும் என்பதும்தான் தேசிய அரசியல் நீரோட்டத்தில் முஸ்லிம்களின் தற்போதைய அரசியல் என்பதை புறிந்து கொள்ளவேண்டும். மேலும் பட்டம் பதவிகள் இல்லாத நிலையில் பொன்னான கருத்துக்கள் சொன்னாலும்கூட அது எடுபட வாய்ப்புகள் குறைவு என்பதையும், மந்திரியாக அல்லது அமைச்சராக இருக்கும் போது கூறும் கருத்துக்களுக்கு பெறுமதி அதிகம் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களுக்கான எதிர்கட்சி வாய்ப்பு என்பது ஜே.ஆர் அரசியல் யாப்புக்கு முன் ஒருமுறையும், கூட்டரசாங்கம் என்பதனால் இன்னொரு முறையும் கிடைத்துள்ளது. இதன்பிறகு எதிர்கட்சி என்பது கேள்விக்குறியாகி விடும்.

    ReplyDelete
  11. ஒரு சிறுபான்மை சமூகத்தில் ரசூலுல்லாஹ் எந்த விடயங்களுக்கு முதலிடம் கொடுத்தார்கள் என்பதை விளங்கி போராடுவது முக்கியமானதது. டெஹிவலயில் பள்ளி விஸ்தரிப்பு அவசியம் ஆனால் கண்டியில் பெரும்பான்மை மனத்தை புண்படுத்தும் மினரத் தேவை தான?

    ReplyDelete
  12. Don't worry. If Mahinda comes (in dream), please claim a Ministerial portfolio for you. Problem solved! Muslims would be happy in the future!

    ReplyDelete
  13. Why Mowlawi, have you started loosing faith in Allah?

    ReplyDelete
  14. Where did the come from bro Gaffoor? Didn't they come from north India ? We must remind the Buddhist of their origin too.

    ReplyDelete

Powered by Blogger.