Header Ads



தெஹிவளை பள்ளிவாசல் சட்டவிரோதமானது, என்ற நிலைப்பாட்டில் பிரதேச செயலகம்


தெளிவளை - பாத்யா மாவத்தை பள்ளிவாசல் சட்டவிரோதமானது என்ற நிலைப்பாடடை பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்திற்கு பிரதேச செயலகம் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமக்கு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தாம் இந்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் பிரதேச செயலகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதுதொடர்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்று வக்பு சபைக்கும் பிரதியொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இத்தகவலை சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.

No comments

Powered by Blogger.