Header Ads



நீர்கொழும்பில் "செடோ" அமைப்பின் 15 ஆவது வருட இப்தார்

-எம்.ஜே.எம். தாஜுதீன்

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நீர்கொழும்பில் வாழும் யாழ் முஸ்லிம்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டுக்காகவூம்  அவர்களின் சமூக- கல்வி அபிவிருத்திக்காகவூம் தோற்றுவிக்கப்பட்ட சமூக கல்வி அபிவிருத்தி அமைப்பின்  (செடோ) 15 ஆவது வருட சமூக ஒன்றுகூடலும் இப்தாரும் நேற்று 2016.06 26 ஆம் திகதி நீர்கொழும்பு பெரியமுல்லை ரசாத் மண்டபத்தில் நடைபெற்றது.

நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள்-பிரதேச அரசியல் பிரமுகர்கள்-கல்விமான்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அஷ்ஷெய்க் ஏ.எம். நூருல் ஹஸன் (ஹாஷிமி) 'கல்வியில் பெற்றௌரின் பங்களிப்பும் இஸ்லாமும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

விசேட துஆ பிரார்த்த்னையூம் இடம்பெற்றது.
 
வடக்கில் முஸ்லிமகளின் பூர்வீக பூமிகளைத் தொடர்ந்தும் பாதுகாப்பது தொடர்பாகவூம் இந்த இப்தார் நிகழ்வில் வற்புறுத்தப்பட்டது.


No comments

Powered by Blogger.