Header Ads



நாமல் ராஜபக்சவின் கோரிக்கை - ஏற்றுக்கொண்டார் கரு


நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஊடகங்களுக்கு முன்கூட்டியே வெளியிட்டப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய இதனை அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபையில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னர் அதில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகள் ஊடகங்களின் மூலம் வெளியிடப்பட்டன.

இந்தநிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விடுத்தவேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், தாம் அந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.