Header Ads



விகாரையை அபிவிருத்தி செய்வதற்காக, வசூலித்த பணத்தில் மது அருந்திய தேரர் கைது

பெல்மடுல  பிரதேசத்தில் மது அருந்திவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறப்படும் அம்பிட்டிய ரத்தன ஜோதி (வயது 48) என்ற தேரரை பொகவந்தலாவை பொலிஸார் புதன்கிழமை(4) இரவு கைதுசெய்துள்ளனர்.

பெல்மடுலை, போதிமா விகாரையைச் சேர்ந்த குறித்த தேரர், விகாரையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென கூறி நோர்வூட், மஸ்கெலியா பொகவந்தலாவை போன்ற பிரதேசங்களில் பணத்தை வசூலித்தாகவும் வசூலிக்கப்பட்ட பணத்தை கொண்டு மது அருந்துவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்தே மேற்படி தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.