Header Ads



ராஜபக்ச குடும்பத்தினர், சிறைச்சாலை மனோநிலையில் இருக்கிறார்கள். - ரஞ்சன்

மஹிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் உரிய பாதுகாப்பு கிடைக்கும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்படவுள்ளனர். இதனால் சிறைச்சாலை மனோநிலையில் இருக்கின்றார்கள். இதன் காரணமாகவே பாதுகாப்பு கோரி சத்தமிடுகின்றனர்.

ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போது உயிர் அச்சுறுத்தல் கிடையாது.

இல்லாத பெறுமதியை பெற்றுக்கொள்ளவே மஹிந்த இராணுவ பாதுகாப்பு கோரி வருகின்றார். எந்தவொரு ஆயுதக் குழுவிற்கோ அல்லது புலம் தமிழ் சமூகத்திற்கோ மஹிந்தவை துரத்திச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்காக மனித வெடிகுண்டை அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். இதனால் முன்னாள் ஜனாதிபதி செல்லும் இடமெல்லாமல் சென்று மைக்கைப் பிடித்து அவரிடம் ஊடகங்கள் கருத்து கேட்பதனை தவிர்க்க வேண்டும்.

ஓய்வு பெற்றுக் கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தூண்டிவிட வேண்டாம் என ஊடகங்களிடம் கோருகின்றேன் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.