Header Ads



"பிரதமர் பதவியை துறந்துவிட்டு, ரணில் வீடு செல்ல வேண்டும்"

முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினால் பொரளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்த வேண்டும்.

நேற்று முன்தினம் இந்த தாக்குதல் பற்றி சரத் பொன்சேகா நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டார்.

கோத்தபாய ராஜபக்ச திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்திக் கொண்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். எனவே சரத் பொன்சேகாவிடம் இந்த சம்பவம் குறித்த இந்த அரசாங்கம் உடனடி விசாரணை நடத்த வேண்டும்.

தாக்குதல் பற்றி சரத் பொன்சேகாவிற்கு தெரிந்துள்ளது.

முதுகெலும்பு உடைய அரசாங்கம் என்றால் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம், கோத்தபாய ராஜபக்ச மீதான குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி பொருத்தமற்றது, முடியாவிட்டால் பதவியை துறந்து அவர் வீடு செல்ல வேண்டும் என ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. We know you better what is your political culture....
    Close your mouth and sleep with Mahinda....its your job..!

    ReplyDelete

Powered by Blogger.