மனோ கணேசனுக்கு, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்திடமிருந்து..!
ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கடந்த 06.04.2016 அன்று தனது உத்தியோகபூர்வ சமூக வலை தளத்தில் “மதமாற்றங்கள் சகவாழ்வை குழப்புகின்றன” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மத மாற்றம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
இலங்கையின் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் என்ற பாரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளத் தக்க ஒன்றல்ல.
மதம் மாறிக் கொண்ட ஒருவர் பற்றிய ஒரு அறிவிப்பு 06.04.2016 அன்று காலையில் ஒரு பத்திரிக்கையில் வெளிவந்திருந்ததாகவும், அந்த அறிவிப்புக் குறித்து ஒருவர் தனக்கு தொலை பேசி மூலம் தெரிவித்து விட்டு வருத்தப்பட்டதாகவும் கூறியுள்ள அமைச்சர் அவர்கள் அதனைத் தொடர்ந்து குறித்த செய்தி பற்றிய தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஒருவர் விரும்பி ஒரு மதத்தை ஏற்றுக் கொண்டு நடப்பது நாட்டின் சகவாழ்வுக்கு உகந்தது அல்ல என்றும், விரும்பிய மதங்களை கடைப்பிடிக்கும் தனி மனித சுதந்திரம் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. நாட்டின் இன்றைய சூழலில் நாம் இன, மத, மொழி நல்லுறவுகளை, ஒற்றுமையை, சகவாழ்வை, வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கும்போது, அதற்கு முரணான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.” என்று அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சகவாழ்வு என்பதையே தவறாக புரிந்து கொண்டதின் வெளிப்பாடாகத்தான் அமைச்சரின் இந்தக் கருத்து அமைந்துள்ளது. ஒருவர் தான் விரும்பிய மதத்தை, கொள்கையை, சித்தாந்தத்தை கடைப் பிடிக்க தடை விதிப்பது என்பது எந்த விதத்திலும் மனித உரிமையை மதிப்பதாகவோ, ஜனநாயகத்தை வாழ வைக்கப் பாடுபடுவதாகவோ, சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை மேம்படுத்துவதாகவோ அமையாது. தான் விரும்பிய மொழியைப் பேசவும், மதத்தை பின்பற்றவும், கொள்கையை ஏற்றுக் கொள்ளவும் என்றைக்கு ஒரு மனிதனுக்கு உரிமைகள் வழங்கப்படுகின்றனவோ அன்றைக்கே ஜனநாயகம் உயிர்ப்பெறுகிறது என்று அர்த்தமாகும். இதுதான் சமூக சகவாழ்வுக்கும் வழி வகுக்கும். அதை விடுத்து, “விரும்பிய மதங்களை கடைப்பிடிக்கும் தனி மனித சுதந்திரம் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்பது ஜனநாயகத்திற்கு நேர் விரோதமான, அடிப்படை மனித உரிமை மீறலாக அமைந்து விடும் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும், மதத்தை, கொள்கையை, சித்தாந்தத்தை பின்பற்றும் பூரண உரிமை வழங்கப்படும் போதுதான் சமூக சகவாழ்வு உயிர்பெருமே தவிர. உரிமைகளை பரித்து உணர்வுக்கும், மத சுதந்திரத்திற்கும் சட்டத்தின் பெயரால் தடை கொண்டு வருவது என்பது அடக்குமுறையின் உச்சத்திற்கு ஜனநாயகத்தை மாற்றுவதற்கு சமனானதாகும்.
1958 காலப்பகுதியில் S.W.R.D.பண்டாரநாயக்கவினால் தமிழ் மொழியினை புறக்கணித்துவிட்டு கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமூலம் எப்படி பல்லாயிரம் அப்பாவி உயிர்களையும் உடைமைகளையும் காவு கொள்ளும் அளவுக்கு 30 ஆண்டுகால கோர யுத்தமாக பரிணாமம் பெற்றதோ அதற்கு நிகரான ஒரு விளைவினைதான் அமைச்சர் மனோ கனேசன் கொண்டு வர விரும்பும் மதமாற்றத் தடைச்சட்டம் உருவாக்கும் என்பதை பொறுப்புணர்வுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றோம்.
"நாட்டின் இன்றைய சூழலில் நாம் இன, மத, மொழி நல்லுறவுகளை, ஒற்றுமையை, சகவாழ்வை, வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கும்போது, அதற்கு முரணான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது” என்று குறித்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
நாட்டின் இன்றைய சூழல் என்று அமைச்சர் குறிப்பிடும் இந்த சூழ்நிலையிலோ அல்லது இதற்கு முன்னரான நாட்டின் சூழலிலோ விரும்பியவர் விரும்பிய மதத்தை பின்பற்றலாம் என்ற அடிப்படை உரிமையை மத மாற்ற தடை சட்டம் என்ற பெயரால் யாரும் மாற்றி விட வில்லை. சக வாழ்வை ஏற்படுத்த அதற்கு உரிய வகையில் அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து “தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர்” என்ற பொறுப்பில் அமர்ந்து கொண்டு இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது சகவாழ்வுக்கும் சமூக ஒற்றுமைக்கும் எதிரானது என்பதை அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறித்த அறிக்கையில் மத மாற்றம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
இலங்கையின் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் என்ற பாரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளத் தக்க ஒன்றல்ல.
மதம் மாறிக் கொண்ட ஒருவர் பற்றிய ஒரு அறிவிப்பு 06.04.2016 அன்று காலையில் ஒரு பத்திரிக்கையில் வெளிவந்திருந்ததாகவும், அந்த அறிவிப்புக் குறித்து ஒருவர் தனக்கு தொலை பேசி மூலம் தெரிவித்து விட்டு வருத்தப்பட்டதாகவும் கூறியுள்ள அமைச்சர் அவர்கள் அதனைத் தொடர்ந்து குறித்த செய்தி பற்றிய தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஒருவர் விரும்பி ஒரு மதத்தை ஏற்றுக் கொண்டு நடப்பது நாட்டின் சகவாழ்வுக்கு உகந்தது அல்ல என்றும், விரும்பிய மதங்களை கடைப்பிடிக்கும் தனி மனித சுதந்திரம் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. நாட்டின் இன்றைய சூழலில் நாம் இன, மத, மொழி நல்லுறவுகளை, ஒற்றுமையை, சகவாழ்வை, வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கும்போது, அதற்கு முரணான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.” என்று அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சகவாழ்வு என்பதையே தவறாக புரிந்து கொண்டதின் வெளிப்பாடாகத்தான் அமைச்சரின் இந்தக் கருத்து அமைந்துள்ளது. ஒருவர் தான் விரும்பிய மதத்தை, கொள்கையை, சித்தாந்தத்தை கடைப் பிடிக்க தடை விதிப்பது என்பது எந்த விதத்திலும் மனித உரிமையை மதிப்பதாகவோ, ஜனநாயகத்தை வாழ வைக்கப் பாடுபடுவதாகவோ, சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை மேம்படுத்துவதாகவோ அமையாது. தான் விரும்பிய மொழியைப் பேசவும், மதத்தை பின்பற்றவும், கொள்கையை ஏற்றுக் கொள்ளவும் என்றைக்கு ஒரு மனிதனுக்கு உரிமைகள் வழங்கப்படுகின்றனவோ அன்றைக்கே ஜனநாயகம் உயிர்ப்பெறுகிறது என்று அர்த்தமாகும். இதுதான் சமூக சகவாழ்வுக்கும் வழி வகுக்கும். அதை விடுத்து, “விரும்பிய மதங்களை கடைப்பிடிக்கும் தனி மனித சுதந்திரம் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்பது ஜனநாயகத்திற்கு நேர் விரோதமான, அடிப்படை மனித உரிமை மீறலாக அமைந்து விடும் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும், மதத்தை, கொள்கையை, சித்தாந்தத்தை பின்பற்றும் பூரண உரிமை வழங்கப்படும் போதுதான் சமூக சகவாழ்வு உயிர்பெருமே தவிர. உரிமைகளை பரித்து உணர்வுக்கும், மத சுதந்திரத்திற்கும் சட்டத்தின் பெயரால் தடை கொண்டு வருவது என்பது அடக்குமுறையின் உச்சத்திற்கு ஜனநாயகத்தை மாற்றுவதற்கு சமனானதாகும்.
1958 காலப்பகுதியில் S.W.R.D.பண்டாரநாயக்கவினால் தமிழ் மொழியினை புறக்கணித்துவிட்டு கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமூலம் எப்படி பல்லாயிரம் அப்பாவி உயிர்களையும் உடைமைகளையும் காவு கொள்ளும் அளவுக்கு 30 ஆண்டுகால கோர யுத்தமாக பரிணாமம் பெற்றதோ அதற்கு நிகரான ஒரு விளைவினைதான் அமைச்சர் மனோ கனேசன் கொண்டு வர விரும்பும் மதமாற்றத் தடைச்சட்டம் உருவாக்கும் என்பதை பொறுப்புணர்வுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றோம்.
"நாட்டின் இன்றைய சூழலில் நாம் இன, மத, மொழி நல்லுறவுகளை, ஒற்றுமையை, சகவாழ்வை, வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கும்போது, அதற்கு முரணான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது” என்று குறித்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
நாட்டின் இன்றைய சூழல் என்று அமைச்சர் குறிப்பிடும் இந்த சூழ்நிலையிலோ அல்லது இதற்கு முன்னரான நாட்டின் சூழலிலோ விரும்பியவர் விரும்பிய மதத்தை பின்பற்றலாம் என்ற அடிப்படை உரிமையை மத மாற்ற தடை சட்டம் என்ற பெயரால் யாரும் மாற்றி விட வில்லை. சக வாழ்வை ஏற்படுத்த அதற்கு உரிய வகையில் அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து “தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர்” என்ற பொறுப்பில் அமர்ந்து கொண்டு இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது சகவாழ்வுக்கும் சமூக ஒற்றுமைக்கும் எதிரானது என்பதை அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மதிப்புக்குறிய அமைச்சர் அவர்களே!
உங்களையும் ஏக இறைவனின் பாதைக்கு நாங்கள் அழைக்கிறோம். இஸ்லாத்தையோ இஸ்லாத்தை நோக்கி வரும் மக்களையோ தவறாக நினைத்து கருத்து சொல்வதற்கு முன்பாக இஸ்லாத்தைப் பற்றி படித்துப் பாருங்கள். குர்ஆனை வாசித்துப் பாருங்கள். இந்த உலகுக்கு இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (அவர் மீது இறைவனின் கருணை உண்டாகட்டுமாக!) அவர்களின் வழிகாட்டல்களை படித்துப் பாருங்கள். இஸ்லாத்தின் அடிப்படையை படித்துப் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள்.
மட்டக்களப்பு மாமாங்கம் கோவில் வீதியை சேர்ந்த உதயகுமார் இந்துமதி என்ற ஒரு பெண் நபர், புனித இஸ்லாம் மதத்தை தழுவிகொண்டு தன் பெயரை உதயகுமார் மபாசா என்று மாற்றிக் கொண்டுள்ளார் என்பதைப் போன்ற அறிவிப்பு 06/04/16/ புதன்கிழமை வீரகேசரி விளம்பர அனுபந்த பக்கம் 02ல் மாத்திரம் வரவில்லை. தினமும் உலகின் பல இடங்களிலும் பல பத்திரிக்கைகளிலும் இடம் பெருகிறது இது போன்ற செய்திகள் இவைகள் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கூறுவதைப் போல் கத்தியைக் காட்டியோ, துப்பாக்கியைக் காட்டியோ, பணத்தைக் காட்டியோ மத மாற்றம் செய்யப்படும் செயல்கள் அல்ல.
மாறாக, குர்ஆனைப் படிக்கும், நபிகளாரின் வாழ்வைப் படிக்கும் மக்களுக்கு இயற்கையாக ஏற்படும் மன மாற்றங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய கலந்துரையாடலுக்கான அமைச்சர் எனும் பொறுப்பான பதவியில் இருக்கும் தாங்கள் பல்லின சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு வளர ஆவண செய்ய விரும்பின், ஒவ்வொரு மதத்தினரும் சக மதத்தினை குறித்தும், அதன் நம்பிக்கைகள், வாழ்வியல் வழிகாட்டல்கள் குறித்தும் தங்களது மனங்களில் படிந்துள்ள ஐயங்களை நேரடியாக கேட்டு நிவர்த்திக்கும் விதமாய் அமையும் நேரடி கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகம் அதிகமாக உங்கள் அமைச்சின் ஊடாக ஏற்பாடு செய்தால் அதுவொன்றே தப்பெண்ணம் களைந்து சகவாழ்வு மலர அடிப்படையாய் அமைய வழிவகுக்கும்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உங்கள் அமைச்சு முன்னெடுக்க வேண்டிய இது போன்ற நிகழ்ச்சிகளை தான் காலத்தின் தேவை கருதி தமிழிலும் சிங்களத்திலும் நாடு தழுவிய ரீதியில் செய்து வருகிறது என்பதனையும் இங்கு வினயமாய் குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.
உங்களையும் ஏக இறைவனின் பாதைக்கு நாங்கள் அழைக்கிறோம். இஸ்லாத்தையோ இஸ்லாத்தை நோக்கி வரும் மக்களையோ தவறாக நினைத்து கருத்து சொல்வதற்கு முன்பாக இஸ்லாத்தைப் பற்றி படித்துப் பாருங்கள். குர்ஆனை வாசித்துப் பாருங்கள். இந்த உலகுக்கு இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (அவர் மீது இறைவனின் கருணை உண்டாகட்டுமாக!) அவர்களின் வழிகாட்டல்களை படித்துப் பாருங்கள். இஸ்லாத்தின் அடிப்படையை படித்துப் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள்.
மட்டக்களப்பு மாமாங்கம் கோவில் வீதியை சேர்ந்த உதயகுமார் இந்துமதி என்ற ஒரு பெண் நபர், புனித இஸ்லாம் மதத்தை தழுவிகொண்டு தன் பெயரை உதயகுமார் மபாசா என்று மாற்றிக் கொண்டுள்ளார் என்பதைப் போன்ற அறிவிப்பு 06/04/16/ புதன்கிழமை வீரகேசரி விளம்பர அனுபந்த பக்கம் 02ல் மாத்திரம் வரவில்லை. தினமும் உலகின் பல இடங்களிலும் பல பத்திரிக்கைகளிலும் இடம் பெருகிறது இது போன்ற செய்திகள் இவைகள் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கூறுவதைப் போல் கத்தியைக் காட்டியோ, துப்பாக்கியைக் காட்டியோ, பணத்தைக் காட்டியோ மத மாற்றம் செய்யப்படும் செயல்கள் அல்ல.
மாறாக, குர்ஆனைப் படிக்கும், நபிகளாரின் வாழ்வைப் படிக்கும் மக்களுக்கு இயற்கையாக ஏற்படும் மன மாற்றங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய கலந்துரையாடலுக்கான அமைச்சர் எனும் பொறுப்பான பதவியில் இருக்கும் தாங்கள் பல்லின சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு வளர ஆவண செய்ய விரும்பின், ஒவ்வொரு மதத்தினரும் சக மதத்தினை குறித்தும், அதன் நம்பிக்கைகள், வாழ்வியல் வழிகாட்டல்கள் குறித்தும் தங்களது மனங்களில் படிந்துள்ள ஐயங்களை நேரடியாக கேட்டு நிவர்த்திக்கும் விதமாய் அமையும் நேரடி கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகம் அதிகமாக உங்கள் அமைச்சின் ஊடாக ஏற்பாடு செய்தால் அதுவொன்றே தப்பெண்ணம் களைந்து சகவாழ்வு மலர அடிப்படையாய் அமைய வழிவகுக்கும்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உங்கள் அமைச்சு முன்னெடுக்க வேண்டிய இது போன்ற நிகழ்ச்சிகளை தான் காலத்தின் தேவை கருதி தமிழிலும் சிங்களத்திலும் நாடு தழுவிய ரீதியில் செய்து வருகிறது என்பதனையும் இங்கு வினயமாய் குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

There is one muslim girl also converted to as a hindu. A week b4 This girl.u can go thrw virakesari.mr mano. Dont be sillv pls.
ReplyDeleteஅமைச்சரின் மீது மரியாதை இருந்தது. ஆனால் அமைச்சரின் கருத்தை பார்த்தபின் அது அற்றுப்போய் விட்டது. அமைச்சரும் குறுகிய நோக்குடைய எதையும் ஆராய்ந்து அறியாமல் பேசும் ஒரு துவேசிதான்.
ReplyDeleteமதம் மாறுதல் என்பது ஒவ்வொருவரினதும் சொந்த விருப்பமாய் அமைதல் வேண்டும். இன்னொருவரின் கட்டாயமாக இருத்தல் கூடாது. உண்மை மனச்சாட்சியின்படி கூறுங்கள். இன்று இலங்கையில் இஸ்லாத்துக்கு செல்லும் அநேகமானோர் சொந்த விருப்பின் பேரிலா செல்கிறார்கள். அல்லது பணம் உட்பட பல வித உதவிகளுக்கு அடிபணிந்தா செல்கிறார்கள். மாமாங்களத்தில் வசிப்பவர் எங்கு குரானை பெறமுடியும். யாருடைய தூண்டுதலும் இல்லாமல் இஸ்லாத்தை ஏற்க முடியும். யதார்த்தம் பேசுங்கள்.(இதை நீங்கள் உங்கள் அனுமதிப்பீர்கள் என்றால் நீங்களும் கருத்துச்சுதந்திரத்திற்கு இடம் கொடுப்பவர்கள்)
ReplyDelete