Header Ads



பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட ஆயுதங்கள், பௌத்த விகாரையிலிருந்து மீட்பு

லக்கல பொலிஸ் நிலையத்தின் ஆயுத வைப்பகத்தில் இருந்து டீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் 05 ரிவோல்வர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அருகில் உள்ள விகாரையின் நீர் தாங்கிக்குள் இருந்து அவை மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை 1.00 மணியளவில் லக்கல பொலிஸ் நிலையத்தின் ஆயுத வைப்பகத்தில் இருந்து டீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் 05 ரிவோல்வர்களும் திருடப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், துப்பாக்கிகள் திருடப்பட்ட சமயத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மூவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. ஒரு பேச்சுக்கு இவை அருகிலுள்ள பள்ளிவாசலின் நீர்தாங்கி ஒன்றினுள்ளிருந்து மீட்கப்பட்டிருந்தால்...? கற்பனை செய்து பாருங்கள். எப்படியெல்லாம் அலட்டுவார்கள்..?

    ஆயுதங்கள் மீட்கப்பட்டதால் 'பௌத்த விகாரைகள் ஆயுதப்பயிற்சியளிக்கும் இடமா..?' என்று யாராவது ஒரு பொதுபலசேனவோ அல்லது சிங்கலேயாவது கேட்கவில்லையே.. எல்லோரும் எங்கே..? ஏன் இந்த கள்ள மௌனம்..?

    ReplyDelete
  2. அருகிலுள்ள பள்ளிவாசலின் காட்டுப்பகுதியில் இந்த ஆயுதங்கள் பெறப்பட்டிருந்தால்கூட தேரர்கள் தேம்பித்தேம்பி அழுதிருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.