Header Ads



தேசிய ஒருமைப்பாட்டுக்காக அர­சாங்­கத்­துடன், கைகோர்க்க உல­மா­சபை தயார் - ரிஸ்வி முப்தி


-ARA.Fareel-

தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் அர­சாங்கம் மேற்­கொள்ளும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்கும் தமது பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­வ­தாக அகில இலங்கை ஐம்­இய்­யத்துல் உல­மா ­சபை தெரி­வித்­துள்­ளது.

இஸ்லாம் எந்த ஒரு இனத்­தி­ன­ரையும் வெறுத்தொதுக்­கு­வதை அனு­ம­திக்­க­வில்லை. இந்­நாட்டு முஸ்­லிம்கள்  சகோ­தர உற­வுடன் ஏனைய இனத்­த­வர்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்­துடன் வாழவே விரும்­பு­கி­றார்கள். எனவே எந்­த­வொரு தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி முரண்­பா­டு­களைத் தீர்த்துக் கொள்­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தா­க உல­மா­சபை தெரி­வித்­துள்­ளது.

நேற்று 11- மதியம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­ ச­பைக்கும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்­கு­மி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது. அக்­க­லந்­து­ரை­யா­டலின் போதே இவ்­வாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­ ச­பையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் ரிஸ்வி முப்தி தெரி­வித்தார். 

கலந்­து­ரை­யா­டலில் உல­மா­ச­பையின் சார்பில் அதன் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக், பிரதிச் செய­லாளர் எம்.எஸ்.எம் தாஸிம் உட்­பட பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டனர். தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும்  நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அமைச்சின் சார்பில் இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸியும் அமைச்சின் மேல­திக செய­லா­ளரும் கலந்து கொண்­டனர்.

கலந்­து­ரை­யா­டலின் போது உல­மா­ சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி உல­மா­ ச­பையின் இன நல்­லி­ணக்­கத்­துக்கும் தேசிய ஒரு­மை­பாட்­டிற்­கு­மான செயற்­திட்­டங்­களை விளக்­கினார்.

இஸ்­லாத்தின் கோட்­பா­டு­களை பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ருக்கு விளக்­கு­வ­தற்­கா­கவும் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் சிங்­கள மொழியில் நூல்கள் வெளி­யிட்­டுள்­ள­துடன் ஆயி­ரக்­க­ணக்­கான நூல்கள் பெரும்­பான்மை சமூ­கத்­தினர் மத்­தியில் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் பெரும்­பான்மை சமூகம் எம்­மீது கொண்­டுள்ள சந்­தே­கங்களை, தவ­றான கருத்­துக்களை களை­வ­தற்கு சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை குத்பா பிர­சங்­கங்கள், இன நல்­லி­ணக்கம், தேசிய ஒரு­மைப்­பாடு என்­ப­வற்­றினை வலி­யு­றுத்தி நிகழ்த்­தப்­ப­டு­கின்­றன என்றார். 

நாட்டில் இன நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் வளர்ப்­ப­தற்கு அர­சாங்­கத்­துடன் கைகோர்க்க உல­மா­ சபை தயா­ராக இருக்­கி­றது. முஸ்­லிம்கள் மீது பெரும்­பான்மை சமூகம் கொண்­டுள்ள தவ­றான கருத்­துக்­களை அகற்­று­வ­தற்கு உல­மா ­சபை என்றும் ஒத்­து­ழைப்பு வழங்கும் என்றும் தெரி­வித்தார்.

இதே­வேளை சில மாதங்­க­ளுக்கு முன்பு உல­மா­ ச­பைக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கு­மி­டையில் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. இனங்­க­ளுக்­கி­டையில் உற­வு­களை வளர்ப்­ப­தற்கும் பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்த்துக் கொள்­வ­தற்கும் 25 பேர் கொண்ட சர்­வ ­ம­தத்­த­லை­வர்கள் அடங்­கிய குழு­வொன்­றினை நிய­மிப்­ப­தாக ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். 

ஜனா­தி­ப­தியின் கருத்­துப்­படி 5 முஸ்லிம் மதத்­த­லை­வர்கள், 5 இந்து மதத்­த­லை­வர்கள், 5 கிறிஸ்­தவத் தலை­வர்கள், 10 பௌத்த மதத்­த­லை­வர்கள் இதில் அங்கம் வகிக்க வேண்டும். ஆனால் இது­வரை அந்தக் குழு நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அமைச்சர் பௌஸியை ஜனா­தி­ப­தி தொடர்பு கொண்டு இக்­கு­ழுவை தாம­தி­யாது நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென வேண்­டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்­றுக்­கொண்ட அமைச்சர் பௌஸி அதற்­கான ஏற்­பா­டு­களைத் தாம­த­மின்றி மேற்­கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்தார்.

இது குறித்து அமைச்சர் பௌஸி கருத்துத் தெரி­விக்­கையில், 

தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அமைச்சு இன நல்­லி­ணக்­கத்­திற்கும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்­கு­மான ஒரு தேசிய திட்­டத்தை வடி­வ­மைக்­க­வுள்­ளது. இதில் உல­மா­ச­பையின் பரிந்­து­ரை­களும் ஆலோ­ச­னை­களும் உள்­வாங்­கப்­படும்.

பாட­சாலை மட்­டத்­திலும் இன நல்­லி­ணக்கம் ஆரம்­பிக்கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. ஒவ்வோர் இனத்­தி­னையும் பாட­சாலை மட்­டத்­திலே மாண­வர்கள் புரிந்து கொள்ளும் வகையில் புரிந்­து­ணர்வு ஏற்­படும் வகையில் இத்­திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்றார். 

தேசிய அர­சாங்கம் நல்­லாட்­சியை மேற்­கொண்­டு­வரும் நிலையில் இச்­சந்­தர்ப்பம் இன நல்­லி­ணக்­கத்­துக்கும் தேசிய ஒற்­று­மைக்கும் சிறந்த சந்­தர்ப்­ப­மாகும். இச்­சந்­தர்­ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார். ARA.Fareel

No comments

Powered by Blogger.