Header Ads



சவூதி அரேபியாவில் உள்ள "சிலோன் ஹவுஸ்" மீட்கப்படும் - அமைச்சர் ஹலீம் சபதம்

-விடிவெள்ளி ARA.Fareel-

தற்­போது இலங்­கையைச் சேர்ந்த தனியார் ஒரு­வரின் நிர்­வா­கத்தின் கீழ் இருக்கும் சவூதி அரே­பி­யா­வி­லுள்ள “சிலோன் ஹவுஸ்” முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் கையேற்­கப்­பட்டு அடுத்த வருடம் முதல் இலங்கை ஹஜ்­ஜா­ஜி­களின் நலன்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­படும் என முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

சிலோன் ஹவுஸை நிர்­வ­கித்து வரும் மௌலவி சாதிக் தற்­போது சுக­யீ­ன­முற்­றுள்ள நிலையில் நிர்­வா­கத்தை முஸ்லிம் சமய கலா­சார  அலு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் கைய­ளிக்க இணக்கம் தெரி­வித்­துள்ளார். இது முஸ்­லிம்­களின் பொதுச் சொத்து என்­பதால் இதற்­கென நம்­பிக்கை பொறுப்­பாளர் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு நிர்­வாகம் அந்தக் குழு­விடம் கைய­ளிக்­கப்­ப­டு­மெ­னவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை ஹஜ் பய­ணி­களின் நலன் கருதி 1963 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட சிலோன் ஹவுஸ் பற்றி விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில் அது தொடர்­பாக வின­விய போதே அமைச்சர் ஹலீம் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

சவூதி அரே­பி­யாவில் “சிலோன் ஹவுஸ்” கட்­ட­டத்­துக்கு பல சவால்கள் ஏற்­பட்ட போதெல்லாம் அவற்றை எதிர்­கொண்டு சிலோன் ஹவுஸைப் பாது­காத்­தவர் சாதிக் ஹாஜியார். சிலோன் ஹவுஸ் தொடர்­பாக நிதி­ வி­ப­ரங்கள் வங்கிக் கணக்கில் இருப்­ப­தா­கவும் தான் சுக­யீ­ன­மாக இருப்­பதால் அதனை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்கத் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

சவூதி அரே­பி­யா­வி­லுள்ள இலங்கைத் தூதுவர் மற்றும் மௌலவி சாதீக் என்­போ­ருக்­கி­டையில் இது தொடர்­பாக விரைவில் பேச்சுவார்த்­தைகள் மேற்­கொள்­ளப்­படும். சிலோன் ஹவுஸை இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் பயணம் மேற்­கொள்ளும் வசதி குறைந்­த­வர்­களின் தங்­கு­மி­ட­மாகப் பயன்­ப­டுத்த முடியும். இதனால் மிகக் குறை­வான கட்­ட­ணத்தில் ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்ள முடி­யு­மாக இருக்கும்.

அடுத்த வருடம் முதல் புதிய நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­களின் கீழ் ஹஜ்­ஜா­ஜி­க­ளுக்கு சிலோன் ஹவுஸ் பயன்­ப­டுத்­தப்­படும் என்றார்.

இதே­வேளை இலங்கை அர­சாங்கம் சிலோன் ஹவுஸைப் பொறுப்­பேற்றால் இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் கட­மைக்­காகச் செல்லும் சுமார் 200 பேர் அளவில் அங்கு தங்­க­வைக்க இயலும் என்றும் இந்த வாய்ப்­பினை வசதி குறைந்த ஹஜ்­ஜா­ஜி­க­ளுக்கு வழங்­கினால் 2 ½ இலட்சம் ரூபா கட்­ட­ணத்தில் அவர்­க­ளது ஹஜ் பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள முடியும் எனவும் இலங்கை ஹஜ்­ மு­க­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.எம்.அஹமட் நிஜார் ‘விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார்.

இதே­வேளை அண்­மையில் உம்ரா கட­மையை மேற்­கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் சவூதி ‘அரப் நியூஸ்’ பத்­தி­ரி­கைக்கு வழங்­கி­யுள்ள நேர்­கா­ணலில் பின்­வ­ரு­மாறு தெரி­வித்­துள்ளார்.

சிலோன் ஹவுஸ் தற்­போது தனிப்­பட்ட ஒருவர் சொந்தம் கொண்­டா­டி­வரும் நிலையில் அது புதிய பரி­பா­லன சபை­யிடம் கைய­ளிக்­கப்­பட வேண்டும். இந்­நி­ய­மனம் அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட வேண்­டு­மெனத் தெரி­வித்­துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது, சிலோன் ஹவுஸைப் பரி­பா­லித்து வந்த நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் அனை­வரும் கால­மா­கி­விட்ட நிலையில் தற்­போது அது தனிப்­பட்ட ஒரு­வரின் நிர்­வா­கத்தின் கீழ் உள்­ளது.

மக்கா அபி­வி­ருத்தித் திட்­டத்தின் கீழ் சவூதி அர­சாங்கம் பழைய சிலோன் ஹவுஸ் கட்­ட­டத்தை உடைத்து விட்டு அதற்கு மாற்­றீ­டாக புதிய கட்­ட­ட­மொன்­றினைக் கைய­ளித்­துள்­ளது. இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ், உம்ரா கட­மை­யினை நிறை­வேற்றச் செல்லும் யாத்­தி­ரி­கர்­களின் பயன்­க­ரு­தியே சிலோன் ஹவுஸ் சவூதி அரே­பி­யா­வினால் வழங்­கப்­பட்­டது.

இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் கட­மை­க­ளுக்­காகச் செல்லும் ஏழை யாத்­தி­ரி­கர்­களின் பாவ­னைக்­கா­கவும் வைத்­திய குழு­வி­னரின் பாவ­னைக்­கா­க­வுமே இது ஒதுக்­கப்­பட்­டது.

தற்­போ­துள்ள சிலோன் ஹவுஸ் 4 மாடி­க­ளுடன் 63 அறை­களைக் கொண்­ட­தாகும். இந்தக் கட்­ட­டத்தில் 261 யாத்­தி­ரி­கர்­களை தங்க வைக்க முடியும். இது ஹரீரி பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில் அமைந்­துள்­ளது.

ரியா­தி­லுள்ள இலங்கைத் தூத­ரகம் சிலோன் ஹவுஸ் தொடர்­பான விட­யங்­களை சவூதி அர­சாங்­கத்­துடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஒரு நப­ருக்கு அட்­ரோனி அதி­கா­ரத்தை வழங்­கி­யி­ருந்­தது. இந்­நி­லையில் அவர் சிலோன் ஹவுஸின் உரி­மையைத் தனக்குச் சாத­க­மாக அமைத்துக் கொண்டார்.

சிலோன் ஹவுஸ் கட்­டடம் 1963 ஆம் ஆண்டு கொழும்பு இலங்கை ஹஜ் நலன்­புரி நிதி­யத்­தினால் 115000 சவூதி ரியா­லுக்கு வாங்­கப்­பட்­டது. 1960 ஆம் ஆண்டு சவூதி மன்னர் சவூத் இலங்கை ஹஜ்­யாத்­தி­ரி­கர்­களின் நலன் கருதி கட்­ட­ட­மொன்­றினை நிர்­மா­ணித்துக் கொள்ள அனு­மதி வழங்­கி­ய­தை­ய­டுத்து சிலோன் ஹவுஸ் வாங்கப்பட்டது என்றார்.

மேலும் இவ்விவகாரத்தை முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

இதேவேளை தற்போது சிலோன் ஹவுஸ் ஹஜ் மாதத்தில் பாகிஸ்தானிய ஹஜ்யாத்திகர்களுக்கு சுமார் 2 மில்லியன் சவூதி ரியாலுக்கு  வாடகைக்கு விடப்படுவதாகவும் அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.   

No comments

Powered by Blogger.