பல்கேரியாவில் புர்காவுக்கு தடை, தடையை மீறுபவர்கள் மீது அபராதம்
மத்திய பல்கேரிய நகரான பஸர்ட்சிக்கில் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதற்கு உள்ளூர் நிர்வாகம் தடைவிதித்துள்ளது. சமூகங்களுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்கவும் பாதுகாப்பை பலப்படுத்தவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கான் நாடொன்றில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுவது இது முதல்முறை என்பதோடு சுமார் 70,000 மக்கள் வசிக்கும் இந்த நகரில் ரோமா சிறுபான்மை முஸ்லிம் பெண்களிடையே முகத்தை மறைக்கும் புர்கா அணிவது வழமையானதாகும்.
7.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பல்கேரியாவில் முஸ்லிம்கள் 12 வீதமாக இருப்பதோடு பெரும்பாலானவர்கள் நூற்றாண்டு காலமாக அங்கு வாழும் துருக் இனத்தவர்களாவர். எனினும் முகத்தை மூடும் வழக்கம் இவர்களிடையே குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ரோமா சிறுபான்மை முஸ்லிம்களிடம் அண்மைக் காலமாக புர்கா அணியும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளமை அந்நாட்டு தேசியவாதிகளின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. பல்கேரிய அரசுக்கு ஆதரவளிக்கு தேசியவாத கட்சி தேசிய அளவில் முகத்தை மூடுவதற்கு தடைவிதிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த தடையை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று நகர மேயர் டோடோர் பபவ் எச்சரித்துள்ளார்.
இந்த முகம் மறைக்கும் பிரச்சினை உண்யாக உலக முஸ்லிம்களுக்கு பெரும் சவாலாக உள்ளது உண்மையாக இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் முகம் மூட வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கும் போது ஏன் இவ்வாறாபிரச்சினைகளை வளர்க வேண்டும் இஸ்லாம் சொல்லாத ஒன்றை செய்யும்போது பிரச்சினை வரத்தான் செய்யும்
ReplyDeleteWelcome mustafa jahufar
ReplyDeleteஅறை குறை ஆடையோடு அலைவது உங்களுக்கு பயங்கரத்தை தோற்றுவிக்கவில்லையா
ReplyDeleteஅழகை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது ஒரு பெண்ணின் அழகு எதில் தங்கியுள்ளது என்பது இந்த முஸ்தபா மற்றும் நவாஸ் போன்றோருக்கு புரியவில்லையா?