Header Ads



இலங்கையில் மகினாமி + சுசுனாமி

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இரு நாட்டு கடற்படைகளுக்குமிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் அவை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான மகினாமி மற்றும் சுசுனாமி என்ற இரு கப்பல்களே இலங்கைக்கு வந்துள்ளன.

அவை எதிர்வரும் 14ம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளன.

இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையில் தொழில்சார் நிபுணத்துவத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்காக கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.